போலி நாணயத்தாள்களுடன் ஒருவர் கைது

Published By: Vishnu

03 Sep, 2018 | 01:11 PM
image

(இரோஷா வேலு) 

கொழும்பு, பெஸ்தியன் மாவத்தையிலுள்ள தனியார் பேரூந்து நிலையத்தில் போலி நாணயத்தாள்களை மாற்ற முயற்சித்த ஒருவரை கைதுசெய்துள்ளதாக புறக்கோட்டை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இச் சம்பவத்தில் கைதுசெய்யப்பட்டவர் அம்பாறையை சேர்ந்த 39 வயதுடைய ஒருவர் ஆவார்.

இன்று காலை 8 மணியளவில் கொழும்பு பெஸ்தியன் மாவத்தை தனியார் பேரூந்து நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேரூந்து ஒன்றின் நடத்துனரிடம் 5000 ரூபா நாணயத்தாள் ஒன்றை சில்லறையாக மாற்றித் தருமாறு கோரியுள்ளார். 

இதன்போது, அந்த நாணயத்தாள் தொடர்பாக பேரூந்து நடத்துனருக்கு எழுந்த சந்தேகத்தில் அவர் புறக்கோட்டை பொலிஸாருக்கு தகவல் வழங்கியுள்ளார். 

இத் தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த பொலிஸார் அவரை சந்தேகத்தின் பேரில் கைதுசெய்தனர்.

கைதுசெய்யப்பட்டவரிடம் மேற்கொண்ட சோதனைகளின் போது மேலும் 5000 ரூபா போலி நாணயத்தாள்கள் 12 பறிமுதல் செய்ததாகவும் பொலிஸார், மேலதிக விசாரணைக்காக அவரை குற்ற விசாரணை பிரிவிடம் ஒப்படைத்தனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47