அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் ஏற்பட்ட கடலரிப்பு காரணமாக ஸ்ரீ சித்திரவேலாயுத சுவாமி ஆலயத்திற்கு முன்னாள் உள்ள கொங்கிறீட் வீதிகள் பாரிய சேதத்துக்குள்ளாகியது.
இதனையடுத்து திருக்கோவில் பிரதேச செயலாளரின் ஆலோசனைகளுக்கு அமைவாக திருக்கோவில் பிரதேச தவிசாளர் இ.வி.கமலராஜின் தலைமையில் கரையோரம் பேணல் மற்றும் கரையோர மூலவளத் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் அதன் மாவட்ட இணைப்பாளர் எம்.ஜ.எம்.ஜெசூரின் நேரடி கண்காணிப்பின் ஊடாக திருக்கோவில் பிரதேசசபை இயந்திரங்கள் கொண்டு அதன் ஊழியர்கள் மற்றும் பிரதேச இளைஞர் ஆகியோரின் பங்களிப்புடன் அவசர நடவடிக்கையாக மணல் மூடைகளை இடும் பணிகள் நேற்றும் இன்றும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
மேலும் இது தொடர்பில் கருத்து தெரிவித்த எம்.ஜ.எம்.ஜெசூர்,
திருக்கோவில் பிரதேசத்தில் தொடர்ந்து இவ்வாறு கடலரிப்புக்குள்ளாகுவதனால் வரலாற்று பழைமை மிக்க முருகன் ஆலயத்தினை பாதுகாக்கும் வகையில் வேறு பிரதேசங்களுக்கு பாதிப்புக்கள் எற்படாதவாறு எமது திணைக்களத்தின் உயர் அதிகாரிகளுடன் கலந்தரையாடி விரைவாக ஒரு நிரந்தர தீர்வு ஒன்றினைப் பெற்றுக் கொடுப்பதற்கு தீர்மானித்தள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM