போராட்டத்தை குழப்ப முயன்றால் எதிர்விளைவுகளை சந்திக்க நேரிடும் - பந்துல

Published By: Vishnu

02 Sep, 2018 | 06:40 PM
image

(இராஜதுரை ஹஷான்)

அரசாங்கத்திற்கு எதிராக இடம்பெறவுள்ள மக்கள் எழுச்சி போராட்டத்தின் பெறுபேறுகள் இடம்பெறவுள்ள மாகாண சபை தேர்தலில் அரசாங்கத்திற்கு எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் என கூட்டு எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார்.

மேலும் ஜனநாயக ரீதியில் உருவாக்கப்பட்ட அரசாங்கத்தை போராட்டங்களால் தம்மை வீழ்த்த முடியாது என்று குறிப்பிடும் அரசாங்கத்திற்கு எதிராக நாடுதழுவிய ரீதியில் எவ்வளவு மக்கள் தற்போது அணிதிரண்டுள்ளனர் என்று  அரசாங்கத்திற்கு காட்டுவதே இப் போராட்டத்தின் நோக்கம் எனவும் அவர் குறிப்பிட்டார்.

அத்துடன் இந்த போராட்டத்தில் 2015 ஆம் ஆண்டு அரசாங்கத்தின் பொய்யான வாக்குறுதியினை நம்பி ஆட்சி மாற்றத்தினை ஏற்படுத்தி நடுத்தர மக்களும், துறைசார் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய பந்துலகுணவர்த்தன எம்.பி.,

போராட்டம் அமைதியான முறையிலேயே இடம்பெறும். மக்களின் ஆதரவை பெற்றுள்ள மஹிந்த தரப்பினரால் பொது மக்களுக்கு எவ்வித இடையூறுகளும் ஏற்படாது.

இருப்பினும் அரசாங்கம் குறித்த போராட்டத்தை சீர்குலைக்க சூழ்ச்சிகளை மேற்கொண்டால் அரசாங்கம் பாரிய எதிர்விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54
news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:49:10
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:31:10
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43