(லியோ நிரோஷ தர்ஷன்)
ஐக்கிய நாடுகள் சபையின் வெளிநாட்டுக் கடன் மற்றும் மனித உரிமைகள் தொடர்பான சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி நாளை திங்கட்கிழமை இலங்கை வருகின்றார்.
எதிர்வரும்11 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை வரை நாட்டில் தங்கியிருக்கும் அவர் ஜனாதிபதி மற்றும் பிரதமர் உள்ளிட்ட அரசாங்கத்தின் பிரதிநிதிகள் சிவில் சமூகத்தினர் என பல தரப்பினரையும் சந்தித்து கலந்துரையாட உள்ளார்.
மனித உரிமைகள் நிலைப்பாட்டிலிருந்து இலங்கையின் பொருளாதாரம் மற்றும் நாட்டின் கடன் உள்ளிட்ட விடயங்களை முழுமையாக ஆராய்ந்து அதன் அறிக்கையினை எதிர்வரும் மார்ச் மாதத்தில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிப்பதே தனது கடமையாக உள்ளதாக சிறப்பு நிபுணர் ஜூவான் பப்லோ பொகோஸ்லாவ்ஸ்கி இலங்கை விஜயம் தொடர்பில் கருத்து தெரிவித்துள்ளார்.
போரின் பின்னரான இலங்கையின் நிலைமைகள் குறித்து ஆராய்வதற்காக பரந்தளவிலான சந்திப்புகளை மேற்கொள்ள சிறப்பு நிபுணரின் நிகழ்ச்சி திட்டத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளது . அரச தரப்பினர்களுக்கு அப்பால் சிவில் சமூகம், கல்வியாளர்கள் மற்றும் அனைத்துலக சமூக பிரதிநிதிகள்,பங்காளர்கள் உள்ளிட்டவர்களுடன் தான் கலந்துரையாடல்களை நடத்தவுள்ளதாகவும் அவர் குறிப்பிடடுள்ளார்.
மேலும் இந்த விஜயத்தின் முடிவில் கொழும்பில் ஊடகவியலாளர்களை சந்திக்க உள்ளார். வடக்கு அல்லது நாட்டின் ஏனைய சில பகுதிகளுக்கான விஜயம் தொடர்பில் உறுதிப்படுத்தப்படாத நிலையில் உள்நாட்டு போரில் மிகவும் மோசமான முறையில் பாதிக்கப்பட்ட வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளில் தற்போதைய முன்னேற்றங்கள் குறித்தும் அவர் அவதானம் செலுத்த உள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM