சளித்தொல்லையால் அவதியுற்று பரிதாப மரணத்தைத் தழுவிக்கொண்ட கலஹா தெல் தோட்டையைச் சேர்ந்த ஒன்றரை வயது பச்சிளம்பாலகன் சங்கர் சஜியின் பூதவுடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்றுமுன்தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
இதன்போது பெருமளவிலான மக்கள் திரண்டு அஞ்சலி செலுத்திய அதேவேளை இறுதிக்கிரியைகளிலும் பங்கேற்றிருந்தனர்.
கடந்த 28ஆம் திகதி கலஹா வைத்தியசாலையில் சிகிச்சையளிக்கப்படாததால் குழந்தை உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டதையடுத்து பேராதனை வைத்தியசாலை திடீர் மரண விசாரணை அதிகாரி அமல் உதயநாத் ஜயவர்தனவின் பகிரங்க தீர்ப்பினையடுத்தே குழந்தையின் பூதவுடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டு நேற்றுமுன்தினம் இறுதிக்கிரியைகள் இடம்பெற்றன.
சம்பவ தினமான கடந்த 28 ஆம்திகதி கலஹா வைத்தியசாலை வைத்தியர்களின் கவனயீனத்தால்தான் குழந்தை உயிரிழந்தது என தெரிவித்து ஆத்திரம் கொண்ட பிரதேச வாசிகள் வைத்தியசாலையை சூழ்ந்து கடும் ஆர்ப்பாட்டத்தையும் தாக்குதல்களையும் நடத்தினர்.
இதேவேளை இக்குழந்தையின் பிரேத பரிசோதனையை பேராதனை வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி எம்.ஏ.எச்.பி. விஜேரத்ன மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்திருந்தார்.
திடீர் மரண விசாரணை அதிகாரி அமில உதயநாத் ஜயவர்தன விசாரணையை நடத்தி குழந்தையின் உடல் உறுப்புக்கள் சிலவற்றை அரச இராசாயன பகுப்பாய்வு பிரிவுக்கு அனுப்பி அறிக்கைகளை பெற்று சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டுள்ளதுடன் பகிரங்க தீர்ப்பினையும் வழங்கியிருந்தார். பின்னர் குழுந்தை சங்கர் சஜியின் பூதவுடல் கலஹா மலர்ச்சாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டது.
இதேவேளை கண்டி மேலதிக நீதிவானின் அறிவுறுத்தலின் பிரகாரம் குழந்தையின் சடலம் அவரது சொந்த வீட்டுக்கு அருகிலேயே அடக்கம் செய்யப்பட வேண்டும் என மரண விசாரணை அதிகாரி குழந்தையின் பெற்றோருக்கு தெரிவித்தார். மேலும் குழந்தையின் இறுதிச் சடங்குகளை நடத்துவதற்கு குழந்தையின் பெற்றோருக்கு பொலிஸாரால் தெளிவுப்படுத்தப்பட்டது.
இதன் பின்னரே குழந்தையின் பூதவுடல் பலத்த பொலிஸ் பாதுகாப்புக்கு மத்தியில் நேற்று முன்தினம் மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM