(இந்தோனேஷியாவிலிருந்து எஸ்.ஜே.பிரசாத்)
18 ஆவது ஆசிய விளையாட்டு விழாவின் ரக்பிப் போட்டியின் அரையிறுதியில் விளையாட இலங்கை அணி தகுதிபெற்றுக்கொண்டது.
இந்தோனேஷியாவில் நடைபெற்றுவரும் ஆசிய விளையாட்டு விழாவில் இலங்கை அணி இதுவரையில் எந்தவொரு பதக்தக்தையும் வெற்றிகொள்ளாத நிலையில் இன்று நடைபபெற்ற ரக்பிப் பிரிவுப் போட்டியில் ஆப்கானிஸ்தானை 36-0 என்ற கணக்கில் வீழ்த்தி இலங்கை அணி முன்னெறியது.
நேற்று ஆரம்பமான ரக்பிப் போட்டிகளில இலங்கை அணி தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு எமிரெட்ஸை எதிர்கொண்டது. இந்தப் போட்டியில் அபாரமான வெற்றியை ஈட்டிக்கொண்ட இலங்கை அணி இரண்டாவது போட்டியில் கொரியாவிடம் விழ்ந்தது.
இந்நிலையில் இன்று இரண்டு பொட்டிகளில் இலங்கை அணி விளையாடியது. இதில் முதலாவதாக நடைபெற்ற போட்டியில் ஆப்கானிஸ்தானை எதிர்த்தாடியது. பெரிதும் சோபிக்காத அணியான ஆப்கானிஸ்தானை 36-0 என்ற கணக்கில் வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது.
இதேவேளை இரண்டாவது போட்டியில் இலங்கை அணி சீனாவை எதிர்த்தாடியது. இதில் கடும்போட்டியை சந்தித்த இலங்கை அணி 17-12 என்ற அடிப்படையில் வெற்றியீட்டி அரையிறுதிக்கு முன்னேறியது.
நாளை நடைபெறவுள்ள அரையிறுதிப் போட்டியில் இலங்கை அணி ஜப்பானை எதிர்கொள்கின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM