இந்தியாவுக்கு எதிரான நான்காவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் இங்கிலாந்து அணி இந்திய அணியின் அசத்தலான பந்து வீச்சுக்கு முகங்கொடுக்க முடியாமல் 76.4 ஓவர்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
சவுத்தாம்டனில் நேற்றைய தினம் இலங்கை நேரப்படி 3.30 மணியளவில் ஆரம்பமான ஐந்து டெஸ்ட் போட்டித் தொடர்கள் கொண்ட நான்காவது போட்டித் தொடரில் நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இங்கிலாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்து களம் புகுந்தது.
இதன்படி இங்கிலாந்து அணி சார்பாக குக் மற்றும் ஜென்னிங்ஸ் ஜோடி களம் புகுந்த வேகத்திலேயே ஒரு ஓட்டங்களை அணி பெற்றிருந்த வேளை 2.1 ஆவது ஓவரில் ஜென்னிங்ஸ் எவ்வித ஓட்டங்களையும் பெற்றுக் கொள்ளாது டக்கவுட் முறையில் பும்ராவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.
இவருக்கு அடுத்த படியாக களமிறங்கிய அணித் தலைவர் ரூட்டும் அதிக நேரம் தாக்குப் பிடிக்காமல் நான்கு ஓட்டங்களுடன் இஷான் சர்மாவின் பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. முறையில் வெளியேற, அடுத்தடுத்து களமிறங்கிய இங்கிலாந்து அணியின் வீரர்களும் நீண்ட நேரம் நிலைத்து நிற்க்காது ஆட்டமிழந்தமையினால் இங்கிலாந்து அணி 86 ஓட்டங்களை எடுப்பதற்குள் 6 விக்கெட்டுக்களை பறிகொடுத்து கதிகலங்கியது.
அதன்படி ஜோனி பிரிஸ்டோ 6 ஓட்டங்களுடனும் குக் 17 ஓட்டங்களுடனும் ஜோஸ் பட்லர் 21 ஓட்டங்களுடனும் பென் ஸ்டோக்ஸ் 23 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
அதன் பின்னர் மொயின் அலியும் குர்ரனும் சற்று நிதானமாக ஜோடி சேர்ந்து ஆடி இங்கிலாந்து அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்தனர். இருப்பினும் இந்த ஜோடி 81 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மொயின் அலி, 59.3 ஆவது ஓவரில் அஷ்வினின் சுழலில் சிக்கி பும்ராவிடம் பிடிகொடுத்து 40 ஓட்டங்களுடன் வெளியேறினார்.
இவரையடுத்து ரஷித் 6 ஓட்டங்களுடனும் புரொட் 17 ஓட்டங்களுடனும் நிதானமாக ஆடி வந்த குர்ரன் 78 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்க, இங்கிலாந்து அணி 76.4 ஓவரில் சகல விக்கெட்டுக்களையும் இழந்து 246 ஒட்டங்களை பெற்றுக் கொண்டது.
இந்தியா சார்பில், பும்ரா 3 விக்கெட்டுக்களையும் ஷமி, இஷாந்த் சர்மா, அஷ்வின் ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதனையடுத்து தனது முதல் இன்னிங்ஸை இந்திய அணி ஆரம்பித்தது. இந்திய அணி சார்பாக தவான் மற்றும் லோகேஷ் ராகுல் ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்டக்காரர்களாக களமிறங்கினர். இறுதியாக முதலாம் நாள் ஆட்ட நேர முடிவின் போது இந்திய அணி 4 ஓவர்களுக்கு விக்கெட் இழப்பின்றி 19 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM