அமெரிக்க நியூயோர்க் நகரில் ஒருவரை கத்தியால் குத்திக் கொன்று பெண்ணொருவரின் முகத்தில் கத்தியால் வெட்டி வீடுவாசலற்ற ஒருவருக்கு தீ வைத்த நபரொருவரை பொலிஸார் கைது செய்த சம்பவம் நேற்று மாலை அமெரிக்க நியூயோர்க் நகரில் இடம்பெற்றுள்ளது.
ஜேம்ஸ் பற்றிக் டில்லொன் (23 வயது) என்ற மேற்படி நபர், அஸ்டன் பிரதேசத்திலுள்ள தனது வீட்டிற்கு அயலில் வசித்த 39 வயது பெண்ணான பெத் கார்பியோ என்பவரின் முகத்தில் கத்தியால் வெட்டிய பின் அவரது தலையில் செங்கல்லொன்றால் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் இடம்பெற்ற வேளை பெத் கார்பியோ தேவாலயத்துக்கு சென்று கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
தொடர்ந்து மதுபான நிலையமொன்றுக்குச் சென்ற டில்லொன், அங்கு 55 வயது நபரொருவரை கத்தியால் குத்திக் கொன்றுள்ளார்.
அவர் 61 வயது வீடுவாசலற்ற நபர் ஒருவருக்கு தீ வைத்துள்ளார். தற்போது அந்த நபர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் டில்லொனைத் தேடிக் கண்டுபிடித்து கைதுசெய்வதற்குச் சென்ற பொலிஸார் மீது, அவர் இரசாயன திரவமொன்றை விசிறி அவர்களை காயமடையச் செய்துள்ளார்.
அவர் மனம் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் என விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM