இலங்கையை ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபைக்குக் கொண்டு செல்லல். வேண்டுமெனவும், இலங்கை மீது இராணுவத் தடைகளை விதிப்பதற்கு ஐ.நா.பாதுகாப்புச் சபையை வலியுறுத்துமாறும், வடகிழக்கு பிரதேசத்தில் ஐ.நா.சபையின் கண்காணிப்புடன் கூடிய பொதுசன வாக்கெடுப்பு ஒன்றை நடாத்துவதற்கு உதவுமாறும் ஐ.நா. சபையின் உறுப்பு நாடுகளை கோருகின்ற பிரேரணை வட மாகாண சபை அமர்வில் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.
வடக்கு மாகாண சபையின் 130 ஆவது அமர்வு இன்று அவைத் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தலைமையில் நடைபெற்றது. இந்த அமர்விலே குறித்த பிரேரணையை வட மாகாண உறுப்பினர் சிவாஜிலிங்கம் முன்வைத்ததையடுத்து இதனை மாகாண சபை உறுப்பினர் குகதாஸ் வழிமொழிந்தார்.
இதனையடுத்து வட மாகாண எதிர்க்கட்சித் தலைவர் சி.தவராசா, குறித்த பிரேரணையானது கொள்கை ரீதியாக ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒன்று. ஆனால் ஐ.நா. சபைக்கு அதனை அனுப்பும்போது முறையான ஆவணமாக மொழிநடையில் மாற்றம் செய்யவேண்டும். எனவே இதற்கு குழு ஒன்றிணை அமைத்து அதற்கேற்ப அனுப்புவதுதான் சிறந்தது என்றார்.
அதனை ஏற்றுக்கொண்ட பிரேரணையை முன்வைத்த எம்.கே.சிவாஜிலிங்கம் அவைத் தலைவர் தலைமையில் ஒரு குழுவினை அமைத்து அதற்கு செயற்படுவதற்கு சம்மதம் தெரிவித்தார்.
இதற்கு அமைவாக மாகாண சபை உறுப்பினர்களான சிவாஜிலிங்கம் , தவராசா, அஸ்மின், சர்வேஸ்வரன், சஜந்தன் ஆகியோரைக் கொண்டு அவைத் தலைவர் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. குறித்த குழுவானது இரண்டு ஒரு தினங்களில் கூடி முறைப்படியான தீர்மானத்தை அடுத்த சபை அமர்வின்போது சமர்ப்பிக்கப்படும் என அவைத் தலைவர் இதன்போது மேலும் தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM