நேபாளத்தில் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு

Published By: Digital Desk 4

29 Aug, 2018 | 07:07 PM
image

பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு தொடர்பான வங்காள விரிகுடாவின் வாயில் என்று அழைக்கப்படும் பிம்ஸ்டெக் அரச தலைவர்கள் உச்சி மாநாட்டில் பங்குபற்றுவதற்காக நேபாளம் பயணமான ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன. 

இன்று  நண்பகல் கத்மண்டுவில் உள்ள தரிபுவன் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.

ஜனாதிபதியை நேபாளத்தின் பிரதிப் பிரதமரும் பாதுகாப்பு அமைச்சருமான ஐஸ்வர் போக்ரெல் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் வரவேற்றனர்.

 

அந்நாட்டின் பூரண இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் ஜனாதிபதிக்கு அமோக வரவேற்பு வழங்கப்பட்டதுடன், இரு நாடுகளினதும் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. ஜனாதிபதி பயணம் செய்த பாதையின் இருமரங்கிலும் இரண்டு நாடுகளினதும் தேசிய கொடிகள் பறக்கவிடப்பட்டிருந்தன. இந்த வரவேற்பு நிகழ்வின்போது ஜனாதிபதியுன் நேபாளத்தின் பிரதிப் பிரதமர் சுமூகமாக கலந்துரையாடினார்.

இம்மாதம் 30 மற்றும் 31ஆம் திகதிகளில் நேபாளத்தின் தலைநகர் கத்மண்டுவில் நடைபெறவுள்ள மாநாட்டின் கருப்பொருள் “சமாதானம், சுபீட்சம் மற்றும் பேண்தகு தன்மைவாய்ந்த வங்காள விரிகுடாவை நோக்கி” என்பதாகும்.

பிம்ஸ்டெக் அமைப்பு பங்களாதேஷ், பூட்டான், இந்தியா, மியன்மார், நேபாளம், இலங்கை மற்றும் தாய்லாந்து ஆகிய 07 தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளைக்கொண்ட வலயமைப்பாகும்.

இதன் முக்கிய நோக்கம் வங்காள விரிகுடாவை அண்மித்த தெற்காசிய மற்றும் தென்கிழக்காசிய நாடுகளுக்கிடையில் தொழில்நுட்ப, பொருளாதார ஒத்துழைப்பை ஏற்படுத்துவதாகும்.

ஜனாதிபதி 31ஆம் திகதி மாநாட்டில் உரையாற்றவுள்ளார். மாநாட்டுடன் இணைந்ததாக ஜனாதிபதி நேபாள பிரதமர் கே.பீ. ஓலி மற்றும் நேபாள ஜனாதிபதி பித்யாதேவி பண்டாரி ஆகியோரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், இரு நாடுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

மேலும் இலங்கைக்கு பொருளாதார சமூக ரீதியான பல்வேறு நன்மைகளை கொண்டுவரும் வகையில் மாநாட்டில் பங்குபற்றும் சில அரச தலைவர்களுடன் ஜனாதிபதி இருதரப்பு பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள உள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06