60 கிலோ கஞ்சா கடத்தல் : சந்தேக நபருக்கு விளக்கமறியல்

Published By: Robert

07 Mar, 2016 | 01:27 PM
image

பொலிகண்டி கரையோரப் பகுதியில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா பெறுமதியான 60 கிலோ கேரளக் கஞ்சாவைக் கடத்தியதாக சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு பருத்தித்துறை மாவட்ட நீதிபதி பி.சிவகுமார் உத்தரவிட்டுள்ளார்.

இளவாலைப் பொலிஸாருக்கு கிடைத்த தகவலையடுத்து இளவானைப் பொலிஸாரும் வல்வெட்டித்துறை பொலிஸாரும் இணைந்து கடந்த 21 ஆம் திகதி பொலிகண்டி கடற்கரையில் ரோந்து நடவடிக்கையில் ஈடுபட்ட போது அங்கு நடமாடிய இன்பர் சிட்டியைச் சேர்ந்த 27 வயதான நபர் ஒருவரை கைது செய்ததுடன் அவரிடமிருந்து 60 கிலோ கஞ்சாப் பொதியையும் மீட்டனர்.

நீதிமன்றத்தின் அனுமதியுடன் சந்தேக நபரை சில தினங்கள் வரை தடுத்து வைத்து விசாரணை நடத்திய வல்வெட்டித்துறை பொலிஸார் அண்மையில் பருத்தித்துறை மாவட்ட நீதிபதி முன்னிலையில் முன்னிலைப்படுத்தினார்கள். அதன்போது எதிர்வரும் 11 ஆம் திகதிவரை விளக்கமறியலில் சந்தேக நபரை வைக்குமாறு உத்தரவிட்ட மாவட்ட நீதிபதி கைப்பற்றப்பட்ட கஞ்சா கான் மாதிரிகளை இரசாயன பகுப்பாய்வுத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்து அறிக்கையினை பெறுமாறும் பணித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22
news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40