கிளிநொச்சி - கரைச்சி பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பிரவுண் வீதிப் பகுதியில் உள்ள வயல் கால்வாயில் இருந்து இன்று காலை யுவதியின் சடலமொன்று மீட்கப்பட்டுள்ளது.
குறித்த வயலுக்கு பின்புறமாக உள்ள குளத்திற்கு மீன்பிடிக்க சென்ற இருவர் பொலிஸாருக்கு தகவல் வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் யுவதியின் சடலத்தை மீட்டுள்ளனர்.
சடலமாக மீட்கப்பட்ட யுவதிக்கு 20 வயதிருக்கும் என தெரிவித்த பொலிஸார் சடலத்தின் முகப் பகுதியில் காயங்கள் இருப்பதாலும் சடலமானது உள்ளாடைகளுடன் மீட்கப்பட்டுள்ளமையாலும் குறித்த யுவதி பாலியல் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதன் பின்னர் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கின்றனர்.
இதுவரை குறித்த சடலம் அடையாளம் காணப்படாத நிலையில், சம்பவ இடத்திற்கு கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் நீதிபதியையும், குற்றத் தடயவியல் பொலிஸாரையும் அழைத்து செல்வதற்கான ஏற்பாடுகளை கிளிநொச்சி பொலிஸார் செய்துகொண்டிருப்பதாக அங்கிருக்கும் எமது பிராந்திய செய்தியாளர் தெரிவிக்கின்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM