தசம புள்ளியை தவறாக புரிந்து கொண்டமையின் காரணமாக தொழிலாளர் ஒருவர் 100 மடங்கு சம்பளத்தை அதிகமாக பெற்ற சம்பவமொன்று அவுஸ்திரேலியாவில் இடம்பெற்றுள்ளது.
தசம புள்ளியை தவறாக புரிந்துகொண்டதால், அவுஸ்திரேலியாவின் வடக்கு பிராந்தியத்திலுள்ள தொலைத்தூர கிராமத்தைச் சேர்ந்த தொழிலாளர் ஒருவருக்கு 4,921.76 அவுஸ்திரேலிய டொலர்களுக்கு பதிலாக 4,92,176 அவுஸ்திரேலிய டெலார்கள் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
இது இவரின் வழமையான சம்பளத் தொகையினை விட 100 மடங்கு அதிகமாகும்.
குறித்த இந்த சம்பவமானது பணியாளர் ஒருவரின் தவறின் காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக தெரிவித்த அந்த பிராந்தியத்தின் தலைமை அதிகாரி, பணத்தை தவறுதலாக பெற்ற தொழிலாளி தொலைத்தூர கிராமத்தில் வசித்து வந்ததால், ஒருவாரம் கழித்து அவர் அந்த பணத்தை மீள் செலுத்தியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM