எம்மை நிம்மதியாக வாழ விடுங்கள் ; சீண்டிப் பார்க்காதீர்கள் - ரவிகரன்

Published By: Vishnu

28 Aug, 2018 | 07:31 PM
image

தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்று வடமாகாண சபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்டு வரும் சிங்களகுடியேற்றங்களை தடுத்து நிறுத்த கோரி இன்று முல்லைத்தீவில் இடம்பெற்ற ஆர்ப்பாட்ட பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்,

தமிழர்களின் பூர்வீக நிலங்களை பல வடிவங்களினூடாக இன்று அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது. அதாவது வன ஜீவராசிகள் திணைக்களம், தொல்பொருள் திணைக்களம், சட்டவிரோத மீன்பிடியாளர்கள் என்ற வகையிலே அபகரித்துக் கொண்டிருக்கிறார்கள். இது அனைத்தையும் ஜனாதிபதி அறிந்தும் அறியாதது போல் இருக்கிறார்.

எங்களுடைய மண் அபகரிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இந்த தருவாயில் எங்களுடைய இளைஞர்கள் புத்திஜீவிகள் இணைந்து இந்த மாபெரும் போராட்டத்தை முன்னெடுத்திருக்கின்றீர்கள். மேலும் ஏற்கனவே மீனவர்களுடைய போராட்டம் இதற்கு ஆரம்ப புள்ளியிட்டது என்பதனை யாரும் மறுக்கமுடியாது சுமார் அந்த போராட்டத்திலும் இரண்டாயிரத்துக்கு மேற்ப்பட்ட மீனவர்கள் ஒன்றுகூடி தங்களுடைய எதிப்பு நடவடிக்கையை முன்னெடுத்து எங்களுடைய தலைவர்களுடன் சேர்ந்து  அமைச்சர் ஒருவர்  இங்கு வந்து அதற்கான  ஒரு தீர்வை வழங்கிவிட்டு சென்றாரே தவிர அதற்கான நடவடிக்கையை இன்னும் மேற்கொள்ளவில்லை.

நேற்றைய தினம் கூட எங்களுடைய இளைஞர்களுடன் திரண்டு நாயாற்று பாலத்தடியில் நாங்கள் நின்றிருந்தோம் அந்த இளைஞர்கள் நின்ற நேரம் காணி அளவிட வந்திருந்தால் கட்டி வைத்திருப்போம் என்று சொல்லுகிறேன் ஏனென்றால் இது எங்களுடைய நிலங்கள்.

எங்களுடைய இடத்தை அபகரிக்க வேண்டும் என்று அரசாங்கத்தினுடைய தலைவர்கள் தயவு செய்து என்ன வேண்டாம் எங்களுடைய மண்ணை நாங்கள் காப்பதற்காகவே இப்படியான ஒரு போராட்டத்தில் ஈடுபடுகிறோம்.  

ஆகவே தமிழர்கள் நாங்கள் இலங்கையின் பிரஜைகள் என்றால் எங்களை நிம்மதியாக வாழ விடுங்கள், எங்களை சீண்டிப் பார்க்காதீர்கள் என்றும் அவர் தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

எழில் மிக்க நுவரெலியாவின் சுற்றுலா தொழில்...

2024-04-16 22:11:33
news-image

சர்வோதய இயக்க ஸ்தாபகர் ஆரியரத்ன காலமானார்!

2024-04-16 20:59:37
news-image

வெடுக்குநாறிமலை அட்டூழியம்! மனித உரிமைகள் ஆணைக்குழு...

2024-04-16 20:16:08
news-image

மின்சாரம் தாக்கி பாலித தேவரப்பெரும உயிரிழந்தார்!

2024-04-16 19:48:23
news-image

அதிவேக நெடுஞ்சாலையை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விசேட...

2024-04-16 19:16:12
news-image

நச்சுத் தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 505 பேர்...

2024-04-16 19:17:56
news-image

சாரதி உறங்கியதால் கிணற்றில் வீழ்ந்த ஆட்டோ...

2024-04-16 19:20:19
news-image

380 கோடி ரூபா பெறுமதியான போதைப்பொருள்...

2024-04-16 17:51:28
news-image

மாறி மாறி வருகின்ற அரசாங்கத்துடன் கூட்டு...

2024-04-16 17:03:46
news-image

சுகாதாரத்துறையில் மருந்துப்பொருள் மோசடி மட்டுமல்ல ;...

2024-04-16 17:05:24
news-image

தமிழ் மக்களின் சுமைதாங்கும் தர்ம தேவதையாக...

2024-04-16 16:32:21
news-image

கொழும்பு, புதுக்கடையில் சுற்றுலாப் பயணிகளை அச்சுறுத்தி...

2024-04-16 21:07:31