தேசிய நல்லிணக்கம், ஒருமைப்பாட்டிற்கு புதிய யாப்பு அவசியம் - சம்பந்தன்

Published By: Vishnu

28 Aug, 2018 | 05:43 PM
image

தேசிய நல்லிணக்கத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றினை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு கிழக்கு கட்டியெழுப்புவதற்காக ஜனாதிபதி தல‍ைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற கூட்டத்தின் போது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினையும் இக் கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அழைப்பு  விடுத்தமைக்கா எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து அவர் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

நேற்றைய தினம் இடம்பெற்ற இந்த செயலணிக் கூட்டத்தில் எதிர்க்­கட்சித் தலைவர் இரா.சம்­பந்தன், இலங்கை தமி­ழ­ரசுக் கட்­சியின் தலைவர் மாவை சேனா­தி­ராஜா உள்­ளிட்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் வடக்கு – கிழக்கு பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்­க­ளான மனோ கணேசன், டி.எம்.சுவா­மி­நாதன், ரஞ்சித் சியம்­ப­லா­பிட்­டிய, கயந்த கரு­ணா­தி­லக்க மற்றும் இரா­ஜாங்க அமைச்சர் சிறி­யாணி விஜே­விக்­கி­ரம, பிரதி அமைச்சர் அங்­கஜன் இரா­ம­நாதன், ஐக்­கிய தேசியக் கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் மற்றும் அரச அதி­கா­ரிகள் உட்­பட பலரும் இந்தக் கூட்­டத்தில் கலந்துகொண்­டி­ருந்­தனர். 

எனினும் கூட்­ட­மைப்பின் எம்.பி.க்­க­ளான எம்.ஏ.சுமந்­திரன், சிவ­சக்தி ஆனந்தன் ஆகியோர் இந்தக் கூட்­டத்தில் கலந்துகொண்­டி­ருக்­க­வில்லை.

ஜனாதிபதிக்கு நன்றி தெரிவித்து அவர் விடுத்துள்ள அந்த ஊடக அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடக்கு கிழக்கிலுள்ள 18 தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களில் 16 உறுப்பினர்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பினை சார்ந்தவர்கள் எனவும், வடக்கு கிழக்கிலுள்ள ஏனைய அனைத்து அரசியல் கட்சிகளினதும் பாராளுமன்ற உறுப்பினர்களையும் விட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிக பாராளுமன்ற உறுப்பினர்களை கொண்டுள்ளமையினால் வடகிழக்கு மக்களினது ஜனநாயக தீர்ப்பிற்கு மதிப்பளிக்க வேண்டும்.

மேலும் யுத்தம் நிறைவடைந்து 9 ஆண்டுகளுக்கு பின்னர் மக்கள் வாழ்ந்த பயிர் செய்த நிலங்கள் இன்னமும் இராணுவத்தின் வசம் இருப்பதனை சம்பந்தன் ஜனாதிபதியிடும் எடுத்துக் கூறியுள்ளார்.

அத்துடன் தமிழ் மக்கள் வன பாதுகாப்பு, வனவிலங்கு பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் போன்ற திணைக்களங்களின் செயற்பாடுகளால் பெரும் அசௌகரியங்களை நோக்குவதாகவும் தமிழ் மக்களுக்கு அவர்கள் வசமுள்ள காணிகளுக்கு பல தசாப்தங்களாக அனுமதிப்பத்திரம் இன்னும் வழங்கப்படாமலும் உள்ளது.

மேலும் 1980 ஆம் ஆண்டுகளில் மஹாவலி சட்டத்தின் கீழ் மஹாவலியிலிருந்து நீர் வருவதற்கு முன்னமே ஏற்படுத்தப்பட்ட L திட்டம் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன் அரசாங்க துறைகளில் வேலைவாய்ப்பு தொடர்பில் தமிழ் இளைஞர்களுக்கு பாரபட்சம் காட்டப்படுகிறது.

இந் நிலையில் தேசிய நல்லிணக்கத்தினையும் ஒருமைப்பாட்டினையும் ஏற்படுத்த தேசிய பிரச்சினைக்கு புதிய அரசியல் யாப்பினூடாக அரசியல் தீர்வொன்றினை காண்பது அத்தியாவசியமான ஒன்றாகும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01