பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நாளை செவ்வாய்க்கிழமை கூடும் பாராளுமன்ற அமர்வில் நாட்டின் பொருளாதார நிலை தொடர்பாக விசேட உரையொன்றை நிகழ்த்தவுள்ளார்.
அத்துடன் காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் தொடர்பாக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றையும் முன்வைக்கவுள்ளது.
பாராளுமன்றத்தின் மார்ச் மாதத்திற்கான முதலாவது அமர்வு நாளை செவ்வாய்க்கிழமை 8ஆம் திகதி ஆரம்பமாகி 11ஆம் திகதி வெள்ளிக்கிழமை வரை நடைபெறவுள்ளது.
இச்சபை அமர்வின் போது நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெளிவுபடுத்துமொரு விசேட உரையொன்றை ஆற்றவுள்ளார்.
கடந்த பெப்ரவரி மாத பாராளுமன்ற அமர்வின் போது எதிர்க்கட்சியினர் எழுப்பிய நாட்டின் பொருளாதார நிலைமை தொடர்பான கேள்விகளுக்கு இன்றைய அமர்வில் தெளிவுபடுத்துவதாக பிரதமர் தெரிவித்தார்.
அதற்கமையவே நாளைய தினம் பிரதமர் விசேட உரையாற்றவுள்ளார். அதேவேளை சபை ஒத்திவைப்பு பிரேரணையொன்றை தமிழ்த்தேசிய கூட்டமைப்பு இன்றைய சபை அமர்வில் முன்வைக்கின்றது.
காணாமல் போனோர் மற்றும் தமிழ் அரசியல் கைதிகள் தொடர்பாகவே இச் சபை ஒத்திவைப்பு பிரேரணை முன்வைக்கப்பட்டு விவாதம் நடைபெறவுள்ளது. அத்தோடு தகவல் அறியும் சட்டமூலத்தையும் அரசாங்கம் நாளை சபையில் முன்வைக்கின்றது. ஆனால் அது தொடர்பிலான விவாதம் பிறிதொரு தினத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை நாட்டின் தற்போதைய பொருளாதார நிலை தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கடந்த வெள்ளிக்கிழமை அவசர அமைச்சரவைக் கூட்டமொன்று இடம்பெற்றதும் இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM