முல்லைத்தீவு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் மகாவலி எல் வலயத்திட்டத்தில் எவ்விதமான சிங்கள குடியேற்றங்களும் இடம்பெறவில்லை. விரைவில் நான் இப்பகுதிக்கு நேரடி கள விஜயமொன்றை செய்யவுள்ளேன். இதன்போது கூட்டமைப்பு எம்.பி.க்கள்என்னுடன் வந்து உண்மை நிலைமையை பார்வையிட முடியும் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
ஜனாதிபதி செயலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற வடக்கு – கிழக்கை கட்டியெழுப்புவதற்கான விசேட ஜனாதிபதி செயலணியின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டார்.
பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியில் கூட்டமைப்பின் பங்கேற்புடன் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் வடக்கு – கிழக்கு அபிவிருத்தி, உட்கட்டமைப்பு வசதிகள், அடிப்படை பொருளாதார பிரச்சினைகள் என்பன குறித்து விரிவாக ஆராயப்பட்டுள்ளன.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா உள்ளிட்ட தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வடக்கு – கிழக்கு பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களான மனோ கணேசன், டி.எம்.சுவாமிநாதன், ரஞ்சித் சியம்பலாபிட்டிய, கயந்த கருணாதிலக்க மற்றும் இராஜாங்க அமைச்சர் சிறியாணி விஜேவிக்கிரம, பிரதி அமைச்சர் அங்கஜன் இராமநாதன், ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட பலரும் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருந்தனர். எனினும் கூட்டமைப்பின் எம்.பி.க்களான எம்.ஏ.சுமந்திரன், சிவசக்தி ஆனந்தன் ஆகியோர் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டிருக்கவில்லை.
மாலை 3 மணியளவில் ஆரம்பமான ஜனாதிபதி செயலணிக் கூட்டம் மாலை 5 மணிவரை நீடித்தது. இதன்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கருத்து வெளியிடுகையில்,
நான் ஜனாதிபதியாக பதவியேற்ற போது இராணுவம் வசமிருந்த பொதுமக்களின் காணிகளில் 88 வீதமானவை விடுவிக்கப்பட்டுள்ளன. அத்துடன் முல்லைத்தீவில் மகாவலி "எல்" வலய திட்டத்துக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப் போவதாகக் கூறுகின்றனர். ஆனால் "எல்" வலயத்தில் எவ்விதமான சிங்களக் குடியேற்றங்களும் இடம்பெறவில்லை என்பதைப் பொறுப்புடன் கூறுகின்றேன்.
விரைவில் நான் முல்லைத்தீவு மாவட்டத்துக்கு விஜயம் செய்து கள நிலைமைகளை ஆராயவிருக்கின்றேன். அங்கு என்ன நடக்கின்றது என்பதைப் பார்க்கவுள்ளேன். இதன்போது வேண்டுமானால் தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் என்னுடன் இணைந்து அங்கு நிலைமைகளைப் பார்வையிடலாம் என்றார்.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிடுகையில்,
எமக்கு அரசியல் தீர்வே மிக முக்கியமானது. உட்கட்டமைப்பு வசதிகளுக்காக அரசியல் தீர்வை ஒருபோதும் விலை பேசமாட்டோம். பல்வேறு எதிர்ப்புகளுக்கு மத்தியிலேயே நாம் இந்தக் கூட்டத்துக்கு வந்திருக்கின்றோம். எனவே அரசாங்கம் உடன் நடவடிக்கைகளை விரைந்து எடுக்க வேண்டும். முக்கியமாக காணி விடுவிப்பு தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டும். கேப்பாப்புலவு காணி விடுவிப்பு விடயத்தில் நீங்கள் வழங்கிய (ஜனாதிபதியைப் பார்த்து) வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. காணி விடுவிப்பு மிகவும் முக்கியமானது. பொதுமக்களின் காணிகளை விடுவிக்க துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திக் கூறினார்.
எதிர்க்கட்சித் தலைவரின் கருத்தை மிகவும் கூர்மையாக இதன்போது ஜனாதிபதி செவிமடுத்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM