நாட்டில் மாற்று அரசியல் தலைமைத்துவத்தின் கீழ் கிரிக்கெட் துறையை நான் முன்னேற்றிக் காட்டுவேன். கிரிகெட் துறைக்கு என்னை மீண்டும் வர வேண்டாம் என்று கூற எவருக்கும் உரிமை கிடையாது என்று முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலைவரும் அமைச்சருமான அர்ஜுன ரணதுங்க தெரிவித்தார்.
பண்டாரநாயக ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நூல் வெளியீட்டு விழா ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இந் நிகழ்வில் அமைச்சர் மேலும் குறிப்பிடுகையில்,
கிரிக்கெட் பற்றி தற்போது நான் கருத்துகள் தெரிவிப்பதில்லை. காரணம் தற்போதைய விளையாட்டுத் துறை அமைச்சர் பைஸர் முஸ்தபா இத்துறை பற்றி நன்கு அறிந்தவர். சட்ட திட்டங்கள் தொடர்பிலும் நன்கு அறிந்தவர். எனவே அந்தப் பொறுப்பை அவருக்கு அளித்துவிட்டு நான் அமைதியாக இருக்கின்றேன்.
எனினும் தற்போது கிரிக்கெட் துறையில் நிலவுகின்ற குறைபாடுகளை நிவர்த்தி செய்வதற்காகவும், கிரிக்கெட் துறையை மேம்படுத்துவதற்காகவும் எதிர்காலங்களில் நான் எனது ஒத்துழைப்பை வழங்குவேன். எனக்கு அதற்கான பொறுப்பு காணப்படுகின்றது. வேறு ஓர் அரசியல் தலைமைத்துவம் இந்தக் கோரிக்கையை என்னிடம் முன்வைத்தாலும் அதனைச் செய்வேன்.
தேசிய அரசாங்கத்தில் விளையாட்டுத்துறை அமைச்சர் பதவியை நான் ஒரு போதும் ஏற்றுக்கொள்ளப் போவதில்லை என முன்னரே தெளிவாக குறிப்பிட்டுள்ளேன். எனினும் வேறு அரசியல் தலைவர்கள் யாரேனும் மீண்டும் கிரிக்கெட் துறையைப் பொறுப்பேற்று அதனை சீர்படுத்தித் தருமாறு கோரினால், அந்தப் பொறுப்பை ஏற்று 6 மாதங்களுக்குள் அதனைச் செய்து முடிப்பதற்கு நான் தயாராகவுள்ளேன். இதனை நான் ஆசைக்காக செய்வதாகக் கூறவில்லை. அதேவேளை என்னால் மீண்டும் கிரிக்கெட்டுக்குள் வர முடியாது என யாராலும் கூற முடியாது. ஏனெனில் என்னைவிட கிரிக்கெட்டில் யாருக்கும் அதிக உரிமை கிடையாது.
தற்போது கிரிக்கெட் துறையில் வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்படுவதில்லை. அரசியல் வாதிகளின் தலையீட்டின் காரணமாக இன்று கிரிக்கட் துறை சீரழிந்துள்ளது என்பதை கவலையுடன் தெரிவிக்கின்றேன். விளையாட்டுத் துறை அமைச்சர்களும் இதற்கு துணை போகின்றனர்.
இதுவே கிரிக்கட் துறை சீரழிவுக்கான பிரதான காரணமாக காணப்படுகின்றது. இவை அனைத்தையும் நினைவில் வைத்துக்கொண்டு மக்கள் அடுத்த தேர்தலில் தகுந்த பதிலை வழங்குவார்கள் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM