சுதந்திரக்கட்சியின் அதிருப்தியாளர்களிற்கு எதிராக நடவடிக்கை- மகிந்த சமரசிங்க

Published By: Rajeeban

25 Aug, 2018 | 03:49 PM
image

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 16 அதிருப்தியாளர்களிற்கும் எதிராக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஒக்டோபர் மாதத்திற்கு முன்னர் கட்சியின் மத்திய குழு தீர்மானிக்கும் என அமைச்சர் மகிந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

16 அதிருப்தியாளர்களும் கட்சிக்கு எதிராக தொடர்ந்தும் சதி முயற்சியில் ஈடுபட்டால் கட்சியின்  மத்திய குழு ஒக்டோபர் மாதம் நடைபெறவுள்ள கட்சியின் வருடாந்த மாநாட்டிற்கு முன்னர் எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் குறித்து தீர்மானிக்கும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

முன்னாள் அமைச்சர் தயாசிறி ஜயசேகர  16 பேர் கொண்ட குழுவினருடன் இல்லை என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை முன்னாள் பிரதிசபாநாயகர் திலங்க சுமதிபால முன்னாள் ஜனாதிபதியுடன் நெருக்கமாக உள்ளார், எனவும் குறிப்பிட்டுள்ள அமைச்சர் பலர் இந்த குழுவிற்கு ஆதரவு வழங்கவில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

சிலர் இரு தரப்பிலும் கால்வைத்துள்ளனர் அவர்கள் ஜனாதிபதி தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை குற்றம்சாட்டுவதுடன் அவர்கள் முன்னாள் ஜனாதிபதியை மீண்டும் அதிகாரத்திற்கு கொண்டுவர முயல்கின்றனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்

.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினால் இதனை இதற்குமேலும் சகித்துக்கொண்டிருக்க முடியாது இதனால் மத்திய குழு துரோகிகளிற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் என நான் கருதுகின்றேன் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06