இலங்கையின் சார்பில் ஆசிய விளையாட்டு விழாவில் பங்கேற்பதற்காக இந்தோனேஷியா சென்ற மூன்று கொல்ப் வீரர்கள் சுற்றுத்தொடரிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்கள்.இவர்கள் தொழில்முறை கொல்ப் போட்டியாளர்களாக இருப்பது இதற்குக் காரணமென தெரிவிக்கப்படுகின்றது.
மொத்தமாக 25 நாடுகள் முன்வைத்த ஆட்சேபனையைத் தொடர்ந்து இலங்கை வீரர்களை சுற்றுத்தொடரிலிருந்து நீக்குவதென ஆசிய ஒலிம்பிக் குழு தீர்மானித்தது.
எவ்வாறேனும் முன்னைய விழாக்களில் தொழில்முறை கொல்ப் போட்டியாளர்களுக்கு இடமளிக்கப்பட்டிருந்ததால் இம்முறை இவர்கள் மூவரையும் இந்தோனேஷியாவுக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுத்திருந்ததாக இலங்கை குழாமுக்கு பொறுப்பான பிரதித் தலைவர் காமினி ஜயசிங்க தெரிவித்தார்.
ஆசிய ஒலிம்பிக் குழுவின் தீர்மானத்தை மதித்து மிதுன் பெரேரா, அனுர ரோஹன, நடராஜா தங்கராஜா ஆகிய மூவருமே நாடு திரும்பியுள்ளனர்.
இந்நிலையில் குறித்த மூவருக்கும் பதிலாக சிசிர குமார அம்ரித் டி சொய்சா சசித்ர டி சில்வா ஆகியோர் இந்தோனேஷியாவுக்கு பயணமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM