இங்கிலாந்திற்கு எதிராக நேற்று டிரென்ட்பிரிஜ் மைதானத்தில் இந்திய அணி பெற்ற வெற்றியே எனது வாழ்நாளில் வெளிநாட்டில் இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றி என இந்திய அணியின் பயிற்றுவிப்பாளர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நான் பயிற்றுவிப்பாளராக பணியாற்றி வரும் கடந்த நான்கு வருடங்களில் பெற்ற வெற்றிகளில் இதுவே மிகச்சிறந்த வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
தென்னாபிரிக்காவில் கடந்த தொடரில் பெற்ற வெற்றி துணிச்சலுடன் போராடி பெறப்பட்ட வெற்றி என குறிப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி இந்த வெற்றி அனைத்து துறைகளிலும் சிறப்பாக விளையாடி பெறப்பட்டது என குறிப்பிட்டுள்ளார்.
துடுப்பாட்டம் பந்துவீச்சு மற்றும் களத்தடுப்பு ஆகிய மூன்று விடயங்களிலும் சிறப்பாக செயற்பட்டோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதலாவது டெஸ்டில் வெற்றிக்கு அருகில் நெருங்கி தோற்றதால் ஏமாற்றமடைந்தோம் இரண்டாவது டெஸ்டில் படுதோல்வியடைந்தோம் என தெரிவித்துள்ள ரவி சாஸ்திரி இதன் காரணமாக நாங்கள் எங்களை நிருபிக்கவேண்டிய நிலையிலிருந்தோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இந்திய வேகப்பந்து வீச்சு குழாமில் இதுவே தலைசிறந்தது இதுவரை விளையாடிய வேகப்பந்து வீச்சாளர்களை இவர்கள் மிக முன்னணியில் உள்ளனர் எனவும் ரவிசாஸ்திரி தெரிவித்துள்ளார்.
நாங்கள் தொடர்ச்சியாக மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளோம் இது மிகவும் சவாலான விடயம் என குறிப்பிட்டுள்ள ரவி சாஸ்திரி ஓய்வெடுங்கள் ,இந்த டெஸ்டில் நீங்கள் செய்த சிறந்த விடயங்களை நினைத்துக்கொள்ளுங்கள்,அதனை தொடர்ந்து முன்னெடுங்கள்,எனினும் அடுத்த டெஸ்ட் போட்டியை நீங்கள் புதிதாக ஆரம்பிக்கவேண்டியிருக்கும் என்பதை மனதில் வைத்துக்கொள்ளுங்கள் இதுவே அடுத்த டெஸ்ட் குறித்து நான் அணியினருக்கு தெரிவிக்கும் செய்தி எனவும் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM