சிங்கப்பூர் உடன்படிக்கையினால் மக்களுக்கு பாரிய சிக்கல் - பந்துல குணவர்தன 

Published By: Daya

23 Aug, 2018 | 04:24 PM
image

(எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி)

சிங்கப்பூர் உடன்படிக்கை மூலமாக இந்த நாட்டின் மக்களுக்கு பாரிய சிக்கல் ஏற்படும் என பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

 சிங்கப்பூர் மாத்திரம் நலன்பெரும் இலங்கை சிங்கப்பூர் சுதந்திர உடன்படிக்கையின் பாதகத்தன்மைகள் குறித்து எதிர்க்கட்சி தலைவர் வாய் திறக்காது அரசாங்கதின் பக்கம் நிற்கின்றார்.

 அதையும் தாண்டி இலங்கைக்கே இந்த உடன்படிக்கை வேண்டும் எனவும் கூறுகின்றார். இது மிகவும் மோசமானது என பொது எதிரணியின் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். 

பாராளுமன்றத்தில் இன்று உற்பத்தி வரி விசேட ஏற்பாடுகள் சட்டத்தின் கட்டளைகள் மீதான விவாதத்தின்போது உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டார். 

சிங்கப்பூர் உடன்படிக்கை மூலமாக இந்த நாட்டின் மக்களுக்கு பாரிய சிக்கல் ஏற்படும் என நாம் கூறுகின்றோம். உள்நாட்டு உற்பத்திகள் அனைத்துமே பாதிக்கப்படும். 

இலங்கையில் இதுவரை  செய்துகொள்ளப்பட்ட எந்தவொரு உடன்படிக்கையையும் விடவும் மோசமானது இந்த சிங்கப்பூர் உடன்படிக்கை. 

இதில் பொருட்கள் மட்டும் அல்லாது சேவையும் சிங்கபூருக்கு வழங்கப்படுகின்றது. முதலீடு மற்றும் சேவை உடன்படிக்கையில் எந்த மாற்றங்களையும் செய்ய முடியாது. 

சிங்கபூர் முதலீட்டாளர் இங்கு வந்து குப்பை மீள் சுழற்சி தொழிற்சாலைகளை அமைத்து குப்பைகளை இங்கு கொண்டுவந்து முகாமைத்துவப்படுத்தும்  நடவடிக்கை எடுக்கப்படும். 

இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அரசியல் அமைப்பையும் மீறி இந்த உடன்படிக்கையை அரசாங்கம் செய்துள்ளது. 

எனினும் அரசாங்கம் இதனை ஏற்றுகொள்ளக் தயாராக இல்லை. ஒருபுறம் வரி சுமைகளை மக்கள் தாங்கிக்கொள்ள முடியாது உள்ளனர். மறுபுறம் இவ்வாறு நாட்டுக்கு ஏற்பில்லாத உடன்படிக்கைகளை செய்து நாட்டினையே பாதிக்கும் நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது .

 இது குறித்து பிரதான எதிர்க்கட்சியோ எதிர்க்கட்சி தலைவரோ வாய் திறக்காமல் உள்ளார் . எதிர்க்கட்சி தலைவரும் அரசாங்கத்தின் சார்பாகவே கருத்துக் கூறுகின்றார். 

சிங்கபூர் மட்டுமே இலாபமடையும் உடன்படிக்கையை நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் எதிர்க்கட்சி தலைவர் கூறுகின்றார்.

 சிங்கபூர் உடன்படிக்கை இலங்கைக்கே முக்கியம் எனவும் அவர்  கூறுகின்றார். இது மிகவும் மோசமான கருத்தாகும். 

மேலும் இலங்கைக்கு குப்பை கொண்டுவரும் உடன்பாடுகளும்  சிங்கபூர் உடன்படிக்கையில் உள்ளது. அரசாங்கம் அதனை மறுக்கும் என்றால் அது குறித்த உடன்படிக்கையை வெளிபடுத்துங்கள். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01
news-image

கத்தரிக்கோலால் தாக்கப்பட்டு ஒருவர் கொலை ;...

2024-03-28 12:03:22
news-image

ஆபாசப் படங்கள், நிர்வாணப் படங்கள் தொடர்பில்...

2024-03-28 12:07:47
news-image

கேப்பாப்புலவு மக்களின் நில விடுவிப்புக்கான போராட்டம்...

2024-03-28 11:32:19
news-image

நியூமோனியாவால் உயிரிழந்த நபரின் நுரையீரலில் கண்டுபிடிக்கப்பட்ட...

2024-03-28 11:04:51