அம்பாந்தோட்டை துறைமுகத்தை இராணுவ நோக்கங்களிற்கு பயன்படுத்துவதற்கு அனுமதிக்க கூடாது என இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜப்பானின் பாதுகாப்பு அமைச்சர் இட்சுனோரி ஓனேடொரா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவை சந்தித்துபேசிய பின்னர் ஜப்பானின் என்எச்கே தொலைக்காட்சிக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனை தெரிவித்;துள்ளார்.
இலங்கை தலைவர்களிடம் இந்த விடயம் குறித்து சுட்டிக்காட்டினேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவிற்கு அம்பாந்தோட்டை துறைமுகம் குத்தகைக்கு விடப்பட்டுள்ள போதிலும் அதனை இராணுவநடவடிக்கைகளிற்கு பயன்படுத்த கூடாது என்ற அம்சம் உடன்படிக்கையில் காணப்படுகின்றது என ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அம்பாந்தோட்டை துறைமுகம் சீனாவிற்கு வழங்கப்பட்டமை குறித்த கரிசனைகள் அதிகரித்து வரும் நிலையிலேயே ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இது குறித்த கரிசனைகள் அதிகரித்துள்ள ஒரு சூழலிலேயே ஜப்பானியி அமைச்சரின் விஜயம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இலங்கைக்கு ஜப்பானிய பாதுகாப்பு அமைச்சர் ஒருவர் விஜயம் மேற்கொண்டுள்ளமை இதுவே முதல்தடவை.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM