கொழும்பு பிரதான நீதிவான் நீதிமன்ற வளாகத்தில், நான்காம் இலக்க நீதிமன்றிலும் அதன் சிறைக் கூண்டிலும் வைத்து, சுட்டுக்கொல்லப்பட்ட நவோதயா மக்கள் முன்னணியின் தலைவரும் கொழும்பு மாநகர சபை உறுப்பினருமான கிருஷ்ணாவின் கொலைக்கு கொலையாளிக்கு உதவி, ஒத்தாசை புரிந்ததாகக் கூறி கைதாகியுள்ள சந்தேகநபரை வீடியோ படம் பிடித்த ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
வழக்கு விசாரணையின் இடைநடுவே நீதிமன்றின் சிறைக்கூண்டுக்கு அருகே பொதுமக்கள் அமர்ந்திருக்கும் இருக்கையில் இரண்டாம் வரிசையில் அமர்ந்திருந்த நபரின் சந்தேகத்துக்கு இடமான நடவடிக்கைகள் காரணமாக, அந்த நீதிமன்ற அறைக்கு பொறுப்பான பொலிஸ் அதிகாரியான பொலிஸ் கான்ஸ்டபிள் எம்.பி.டி.மதுசங்க அவரைக் கைது செய்து நீதிமன்ற பொலிஸ் காவலரண் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ரம்யசிறியிடம் ஒப்படைத்துள்ளார்.
இதன்போது சந்தேகநபர், கிருஷ்ணா கொலையின் சந்தேகநபரைப் படம் பிடித்ததை அவதானித்ததாகவும் அவரது கையடக்கத் தொலைபேசியை சோதனை செய்ய வேண்டும் எனவும் கான்ஸ்டபிள் பொறுப்பதிகாரியிடம் கூறியுள்ளார்.
இதனையடுத்து கைதான நபரின் கையடக்கத் தொலைபேசியை சோதனை செய்தபோது அதில் கிருஷ்ணா கொலை சந்தேகநபரின் வீடியோ இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந் நிலையில் தொலைபேசியையும் அதன் பதிவு உபகரணத்தையும் கைப்பற்றிய பொலிஸார் கொலைச் சந்தேகநபரைப் படம் பிடித்ததன் பின்னணியை கண்டறிய விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM