(இராஜதுரை ஹஷான்)
தேசிய அரசாங்கம் நிலையான அபிவிருத்திகளை மாத்திரமே மேற்கொண்டுள்ளது .கடந்த அரசாங்கத்தினை போன்று அபிவிருத்தி என்ற பெயரில் போலியான அபிவிருத்திக்களை மேற்கொள்ளவில்லை எமது நிலைபேறான அபிவிருத்திக்கு மொரஹாகந்த மற்றும் களுகங்கை அபிவிருத்திக்களே எடுத்துக்காட்டாக காணப்படுகின்றது என்று தெரிவித்த விவசாயத்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் சிந்தனையின் கீழ் வயம்ப நீர்த்தேக்கத்தின் கட்டுமாணப்பணிகள் நாளை மறுதினம் ஜனாதிபதி, பிரதமர் தலைமையில் இடம் பெறவுள்ளது. தேசிய உற்பத்திகளை மேம்படுத்தி இலங்கையினை விவசாய தன்னிறைவுடைய நாடாக மாற்றுவதே எமது நோக்கம் என தெரிவித்தார்.
மகாவலி அபிவிருத்தி நிலையத்தில் இன்று இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்தக் கொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் கூறுகையில்,
"தேசிய அரசாங்கம் இதுவரை காலமும் எவ்வித அபிவிருத்தி திட்டங்களையும் மேற்கொள்ளவில்லை என்று எதிர் தரப்பினர் குற்றம் சுமத்துகின்றனர். அரசாங்கம் என்ன அபிவிருத்திகளை செய்துள்ளது என்ற விடயத்தை பயனடைந்த மக்கள் நன்கு அறிவார்கள் . கடந்த அரசாங்கம் செய்ததை போன்று தேசிய அரசாங்கம் செய்ய வில்லை என்ற விடயத்தை ஏற்றுக் கொள்ளவே வேண்டும் அனைத்து துறைகளிலும் ஊழல் மோசடிகளை அரசாங்கம் மேற்கொள்ளவில்லை.
மொரஹாகந்த அபிவிருத்தி திட்டம் கடந்த அரசாங்கத்தில் இழுத்தடிக்கப்பட்ட அபிவிருத்தி திட்டமாகவே காணப்பட்டது இதன் காரணமாக பல விவசாய குடும்பங்கள் பாரிய பிரச்சினைகளை எதிர் கொண்டனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் குறுகிய காலக்கட்டத்தில் இவ்விரு பாரிய வியத்தகு அபிவிருத்தி திட்டங்களும் முழுமையாக்கப்பட்டு மக்களிடம் கையளிக்கப்பட்டது.
அரசாங்கம் தேசிய உற்பத்தியினை இல்லாதொழிப்பதாக குறிப்பிடுபவர்கள் நாட்டு நடப்புக்கள் அறியாமலே கருத்துக்களை குறிப்பிட்டு வருகின்றனர். இன்று தேசிய உற்பத்திக்கள் பாரிய அளவில் முன்னேற்றமடைந்துள்ளது. கடந்த காலங்களில் இறக்குமதி செய்யப்பட்ட உற்பத்திக்கள் இன்று ஏற்றுமதி செய்யப்படுகின்றது. சுற்றுலாத்துறை பாரிய முன்னேற்றமடைந்துள்ளமையின் காரணமாக அந்நிய செலாவனி அதிகளிவில் கிடைக்கப் பெறுகிறது. சர்வதேசத்தின் அதிருப்தியை பெற்ற நாடாக காணப்பட்ட இலங்கை இன்று அனைவரினதும் வரவேற்பை பெற்றுள்ளது இதுவே எமது பாரிய வெற்றியாகும்.
அரசாங்கத்தை கவிழ்ப்பதாக பொது எதிரணயினர் பல போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆனால் அவர்களின் போராட்டம் அரசாங்கத்திற்கு எவ்விதத்திலும் பாதிப்பினை ஏற்படுத்தவில்லை . எதிர்வரும் 5ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளதாக உள்ள போராட்டம் எமக்கு ஒரு சவாலல்ல . போராட்டங்கள் பொது எதிரணியின் அரசியல் கொள்கையாகவே காணப்படுகின்றது என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM