மீண்டும்  யுத்தம் ஏற்படாத நாட்டை உருவாக்கும் காலமாகும் ; விக்கினேஸ்வரனுக்கு நினைவூட்டும் மங்கள

Published By: Digital Desk 4

21 Aug, 2018 | 11:06 AM
image

நினைவுத் தூபிகளை அகற்றுவதற்கோ நிர்மாணிப்பதற்கோ உரிய காலம் தற்போது இல்லை. மீண்டும்  யுத்தம் ஏற்படாத நாட்டை உருவாக்கும் காலமாகும் என்பதனை விக்கினேஸ்வரனின் அவதானத்திற்கு கொண்டு வருகின்றேன் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.

வடக்கில் நினைவுத் தூபிகளை நிர்மாணிப்பதாகவும் அகற்றுவதாகவும் கூறுவதற்கு விக்கினேஸ்வரனுக்கு உரிமை உள்ளது.

இதனால் நாடுபிளவுபடும் என கூற முடியாது. இவ்வாறான கருத்துகள் நாட்டை பிரிப்பவையல்ல. நினைவு தூபிகளை நிர்மாணிக்க அதிகாரம் உள்ளது. 

நாம் வெளிநாட்டவர்களுடன் யுத்தம் செய்யவில்லை. வெளிநாட்டு இராணுவத்தை தோற்கடித்த யுத்ததை செய்யவில்லை. எமது நாட்டின் சகோதரர்களுடனே யுத்தம் செய்தோம். 

தற்போது யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது தூபிகளை நிர்மாணிக்கும் காலம் அல்ல. நாட்டை கட்டியெழுப்பும் காலமாகும் என்பதனை விக்கினேஸ்வரனுக்கு கூற விரும்புகின்றேன். 

தற்போது நினைவு தூபி நிர்மாணிப்பதோ அல்லது அகற்றவதோ பிரச்சினையில்லை. மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட்டை உருவாக்குவதே தேவையாகும் எனத் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள நிதி மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய “நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் தருவாயில் வடக்கில் நினைவு தூபிகளை அகற்ற வேண்டும் என சி.வி விக்கினேஸ்வரன் கோரியுள்ளாரே?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நயினாதீவு நாகபூஷணி அம்மன் ஆலய ஆதீனக்...

2024-04-20 10:03:15
news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17