நினைவுத் தூபிகளை அகற்றுவதற்கோ நிர்மாணிப்பதற்கோ உரிய காலம் தற்போது இல்லை. மீண்டும் யுத்தம் ஏற்படாத நாட்டை உருவாக்கும் காலமாகும் என்பதனை விக்கினேஸ்வரனின் அவதானத்திற்கு கொண்டு வருகின்றேன் என நிதி மற்றும் ஊடக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்தார்.
வடக்கில் நினைவுத் தூபிகளை நிர்மாணிப்பதாகவும் அகற்றுவதாகவும் கூறுவதற்கு விக்கினேஸ்வரனுக்கு உரிமை உள்ளது.
இதனால் நாடுபிளவுபடும் என கூற முடியாது. இவ்வாறான கருத்துகள் நாட்டை பிரிப்பவையல்ல. நினைவு தூபிகளை நிர்மாணிக்க அதிகாரம் உள்ளது.
நாம் வெளிநாட்டவர்களுடன் யுத்தம் செய்யவில்லை. வெளிநாட்டு இராணுவத்தை தோற்கடித்த யுத்ததை செய்யவில்லை. எமது நாட்டின் சகோதரர்களுடனே யுத்தம் செய்தோம்.
தற்போது யுத்தம் நிறைவடைந்து விட்டது. தற்போது தூபிகளை நிர்மாணிக்கும் காலம் அல்ல. நாட்டை கட்டியெழுப்பும் காலமாகும் என்பதனை விக்கினேஸ்வரனுக்கு கூற விரும்புகின்றேன்.
தற்போது நினைவு தூபி நிர்மாணிப்பதோ அல்லது அகற்றவதோ பிரச்சினையில்லை. மீண்டும் யுத்தம் ஏற்படாத வகையில் நாட்டை உருவாக்குவதே தேவையாகும் எனத் தெரிவித்தார்.
கொழும்பில் அமைந்துள்ள நிதி மற்றும் ஊடக அமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு ஊடகவியலாளர்கள் எழுப்பிய “நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டுக்கொண்டிருக்கும் தருவாயில் வடக்கில் நினைவு தூபிகளை அகற்ற வேண்டும் என சி.வி விக்கினேஸ்வரன் கோரியுள்ளாரே?” என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM