அரிசி ஆலையை மீண்டும் இயங்க வைக்க வேண்டும் ; மக்கள் கோரிக்கை

Published By: Daya

21 Aug, 2018 | 10:23 AM
image

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு விநாயக புரம் கிராமத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்டு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள அரிசியாலை செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம் பகுதியில் யுத்தம் காரணமாக சேதமடைந்து காணப்பட்ட அரிசியாலையினை மீள்குடியமர்வின் பின்னரான அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு பனங்காமம் பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளபோதும், கடந்த ஆறு ஆண்டுகளாக குறித்த அரிசியாலையை இயங்க வைக்கப்படாத நிலையில் செயலிழந்து காணப்படுகின்றது.

யுத்த காலத்தில் அதிக வருமானத்தை கொண்டதும் மக்களுக்கான சேவைகளை வழங்கியதுமான மேற்படி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் இன்று சாதாரணமான ஒரு கிளை நிலையத்தைக்கூட செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் குறித்த அரிசியாலையை வேறு நிறுவனங்கள் அல்லது தனியாரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைத்து அதனை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.

முல்லைத்தீவு மாவட்டத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு சொந்தமான 5 வரையான அரிசியாலைகள் இவ்வாறு காணப்படுவதாகவும் இவ்வாறான அரிசியாலைகள் ஒவ்வொன்றையும் இயங்க வைப்பதற்கு 20 மில்லியன் ரூபாநிதி தேவைப்படுகின்றது.

இவற்றை இயங்க வைப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58