முல்லைத்தீவு மாந்தை கிழக்கு விநாயக புரம் கிராமத்தில் சுமார் 50 மில்லியன் ரூபாவிற்கும் மேற்பட்ட நிதியில் நிர்மாணிக்கப்பட்டு பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ள அரிசியாலை செயலிழந்த நிலையில் காணப்படுகின்றது.
முல்லைத்தீவு மாந்தைகிழக்கு பிரதேச செயலர்பிரிவின் கீழ் உள்ள விநாயகபுரம் பகுதியில் யுத்தம் காரணமாக சேதமடைந்து காணப்பட்ட அரிசியாலையினை மீள்குடியமர்வின் பின்னரான அபிவிருத்தித்திட்டத்தின் கீழ் சுமார் 50 மில்லியன் ரூபா செலவில் புனரமைக்கப்பட்டு பனங்காமம் பற்று பலநோக்கு கூட்டுறவுச்சங்கத்திடம் கையளிக்கப்பட்டுள்ளபோதும், கடந்த ஆறு ஆண்டுகளாக குறித்த அரிசியாலையை இயங்க வைக்கப்படாத நிலையில் செயலிழந்து காணப்படுகின்றது.
யுத்த காலத்தில் அதிக வருமானத்தை கொண்டதும் மக்களுக்கான சேவைகளை வழங்கியதுமான மேற்படி பலநோக்கு கூட்டுறவுச்சங்கம் இன்று சாதாரணமான ஒரு கிளை நிலையத்தைக்கூட செயற்படுத்த முடியாத நிலையில் உள்ளதாகவும் குறித்த அரிசியாலையை வேறு நிறுவனங்கள் அல்லது தனியாரிடம் குத்தகை அடிப்படையில் ஒப்படைத்து அதனை இயங்க வைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் பிரதேச மக்கள் கோரியுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் பலநோக்கு கூட்டுறவுச் சங்கங்களுக்கு சொந்தமான 5 வரையான அரிசியாலைகள் இவ்வாறு காணப்படுவதாகவும் இவ்வாறான அரிசியாலைகள் ஒவ்வொன்றையும் இயங்க வைப்பதற்கு 20 மில்லியன் ரூபாநிதி தேவைப்படுகின்றது.
இவற்றை இயங்க வைப்பதற்கு தற்போது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட கூட்டுறவு திணைக்களத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM