மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு மீண்டும் ஒத்தி வைப்பு

Published By: Digital Desk 4

20 Aug, 2018 | 10:27 PM
image

வவுனியாவில் வன்புணர்வின் பின் கொல்லப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

வவுனியாவில் துஸ்பிரயோகத்தின் பின் படுகொலை செய்யப்பட்ட 14 வயது மாணவி ஹரிஸ்ணவியின் வழக்கு விசாரணை இன்று வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்ற நிலையில், அவ் வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 16ஆம் திகதி பாடசாலை மாணவி ஹரிஸ்ணவி வவுனியா, உக்கிளாங்குளம் பகுதியில் உள்ள தனது வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார். திடீர் மரண விசாரணை அதிகாரியின் விசாரணை அறிக்கையில் ஹரிஸ்ணவி பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தப்பட்டுக் கொலை செய்யப்பட்டமைக்கான தடயங்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்படி சந்தேகதின் பேரில் அப்பகுதியில் வசிக்கும் குடும்பஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் வழக்கு விசாரணைகள் வவுனியா மாவட்ட நீதிமன்றில் இடம்பெற்று வந்தது. 

சட்டமா அதிபர் திணைக்களத்தில் இருந்து இது தொடர்பான குற்றப்பத்திர அறிக்கை இன்றும் வராத காரணத்தினால் குறித்த வழக்கு விசாரணைகள் எதிர்வரும் நவம்பர் 26 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குறித்த சிறுமி மரணமாகி இரண்டரை ஆண்டுகள் கடந்துள்ள நிலையிலும் அச் சிறுமியின் மரணத்திற்கு நீதி கிடைக்கவில்லையென பெண்கள் அமைப்புக்கள் பலவும் கவலை வெளியிட்டுள்ளன.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மன்னாரில் பனங்காட்டுக்குள் பரவிய தீயினால் வீடு...

2024-03-19 09:21:22
news-image

இன்றைய வானிலை

2024-03-19 05:59:48
news-image

இந்திய பொதுத்தேர்தலுக்கு பின்னரே எட்கா ஒப்பந்தம்...

2024-03-19 01:49:26
news-image

மட்டு போதனா வைத்தியசாலை புற்று நோய்...

2024-03-19 01:40:58
news-image

இலங்கை அரசின் தமிழர்களுக்கு எதிரான ஒடுக்குமுறைகளை...

2024-03-19 01:25:18
news-image

அரசாங்கம் வழங்கிய வாக்குறுதிகளில் பெரும்பாலானவை நிறைவேற்றப்பட்டுள்ளன...

2024-03-18 23:43:46
news-image

விவசாயத் துறை நவீனமயமாக்கல் திட்டத்தின் கீழ்...

2024-03-18 22:52:15
news-image

நீர்த்தேக்கத்தில் மூழ்கி இளம் பிக்கு உயிரிழப்பு  

2024-03-18 22:16:52
news-image

வெடுக்குநாறிமலை விவகாரத்தில் கைதுசெய்யப்பட்டோர் குறித்து ஆராய...

2024-03-18 18:20:01
news-image

13 நபர்களால் 14 வயதான சிறுமி...

2024-03-18 18:50:28
news-image

விடுதியொன்றில் கழுத்தறுக்கப்பட்டு காயமடைந்த நிலையில் இருவர்...

2024-03-18 17:09:50
news-image

மொரட்டுவையில் கழுத்தறுக்கப்பட்டு பெண் கொலை!

2024-03-18 16:37:01