அம்பாந்தோட்டை துறைமுகத்தை பலவந்தமாக தன் வசம் வைத்துக்கொள்வதற்கு சீனா நடவடிக்கை எடுத்துள்ளது. மேலும் பிராந்தியத்தின் வலுவான நாடாக மாறுவதற்கும் தமது இராணுவ பலத்தை வெளிநாடுகளுக்கு திணிப்பதற்கும் சீனா முற்படுவதாக அமெரிக்காவின் பாதுகாப்பு நிறுவனமான பென்டகன், காங்கிரஸ் சபையில் சமர்ப்பித்த பூரண அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பிராந்தியத்தின் வலுவான நாடாக மாறுவதற்கான சீனா முன்னெடுத்துள்ள திட்டங்கள் தொடர்பில் குறித்த அறிக்கையில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
இதன்படி இராணுவ தளங்களை அமைப்பதற்காக சீனா செயற்பட்டு வருகின்றது. கடந்த வருடம் அம்பாந்தோட்டை துறைமுகத்தை தன்வசம் பலவந்தமாக சுவீகரிக்க முற்பட்டுள்ளது. இலங்கையை போன்று பாகிஸ்தான் போன்ற நாடுகளையும் சீனா தன்வசம் வைத்துக்கொள்ள முயற்சிப்பதாக அமெரிக்கா பென்டகன் நிறுவனத்தில் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
எனினும் சீனா பாதுகாப்பு அமைச்சு இந்த அறிக்கையை பூரணமாக நிராகரித்துள்ளது.பனிப்போர்கால மனநிலையில் குறித்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடதக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM