நல்லிணக்கம் என்ற பெயரில் அரசாங்கத்தை வைத்துக் கொண்டு பெளத்த மதத்தை அழிப்பதற்கு ஒரு சிலர் முயற்சிகளை முன்னெடுத்து வருகின்றனர். ஆகவே நாட்டில் பெளத்த தர்மத்தை பாதுகாக்க அரசாங்கம் முன்னின்று செயற்பட வேண்டும் ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குறிப்பிட்டார்.
புத்தர் சிலை வைப்பதற்கு வடக்கில் இடம் இல்லை. கிழக்கிலும் பிரச்சினை உள்ளது. ஆனால் தற்போது மேல் மாகாணத்திலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
இதுவரை காலமும் கொழும்பு மாநகர சபையில் இருந்த புத்தர் சிலையை தற்போதைய மேயர் அகற்றியுள்ளதாக ஜாதிக ஹெல உறுமயவின் முன்னாள் தலைவர் ஒமல்பே சோபித தேரர் குற்றம் சுமத்தினார்.
இலங்கையின் அரசியலமைப்பில் 9 ஆவது சரத்தில் பெளத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்குவதுடன் பாதுகாப்போம் என கூறப்பட்டுள்ளது. எனினும் இந்த ஷரத்தில் எமக்கு தெளிவில்லாத நிலைமை உள்ளது. இந்த விடயம் தொடர்பாக அப்போதே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவிடம் பிக்குகளினால் வினவப்பட்டது. எனினும் அதற்கு இன்னும் பதில் கிடைக்கவில்லை.
அரசியலமைப்பின் 9 ஆவது ஷரத்தின் நோக்கம் விகாரைகளை புனரமைப்பதும் அறநெறி பாடசாலைகளை நிர்மாணிப்பதுடன் மாத்திரம் மட்டுப்படுமா? அல்லது பெளத்த கொள்கை பாதுகாப்பட்டு தொடர்ந்து வளர்ச்சி பாதைக்கு கொண்டு செல்லப்படுமா? என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இந்த கேள்விக்கு இன்னும் கூட பதிலில்லை.
தற்போது நாட்டில் 9176 விகாரைகள் உள்ளன. எனினும் 23 ஆயிரத்துக்கும் அதிகமான மதுபான வியாபார நிலையங்கள் உள்ளன. இதுவே எமது நாட்டின் நிலைமையாக உள்ளது.
பெளத்த கொள்கையை நாம் பாதுகாக்க வேண்டும். விகாரைகளை பாதுகாக்க வேண்டும். அப்படியாயின் அரசாங்கமும் மகாசங்கத்தினருமே இது தொடர்பில் அவதானம் செலுத்த வேண்டும்.
பெளத்த மத கொள்கைக்கு எதிராக செயற்படுவோரை தடுப்பதற்கான எந்தவொரு தீர்வும் இன்னும் முன்வைக்கப்படவில்லை. இந்த நாட்டில் பெளத்தர்கள் அப்பாவிகளாக மாறிவிட்டனர்.
தேசிய நல்லிணக்க மற்றும் ஒருமைப்பாடு தொடர்பான செயலணி மூலம் தேசிய நல்லிணக்கத்தினை கட்டியெழுப்புவதற்காக நாடகங்கள் உருவாக்கப்பட்டு இலங்கை ஒலிபரப்பு கூட்டுதாபனத்தின் மூலம் ஒலிபரப்பியுள்ளனர். இந்த நாடகத்தின் பெயர் முழுமையாக பெளத்த மதத்தினை இழிவுபடுத்தக் கூடியதாக அமைந்துள்ளது. தெறுவன் சரணய் என்பதற்கு தருவன் சரணய் என்று பெயரிட்டுள்ளனர். இது போன்று நாடகங்களின் பெயர்களில் அர்த்தங்கள் மாற்றப்பட்டுள்ளன. எனினும் இதனை அரசாங்கத்தின் அவதானத்திற்கு கொண்டு வந்த பின்னர் அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷ தலையிட்டு அந்த நாடக அரகேற்றத்தை தடை செய்தார்.
எனவே நல்லிணக்கம் என்ற பெயரில் அரசாங்கத்தை வைத்துக் கொண்டு பெளத்த மதத்தை அழிப்பதற்கு முயற்சித்து செய்து வருகின்றனர். புத்தர் சிலை வைப்பதற்கு வடக்கில் இடம் இல்லை. கிழக்கிலும் பிரச்சினை உள்ளது. ஆனால் தற்போது மேல் மாகாணத்திலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இதுவரை காலம் கொழும்பு மாநகர சபையில் இருந்த புத்தர் சிலையை தற்போதைய மேயர் அகற்றியுள்ளதாக தெரியவருகின்றது. கொழும்பு மேயராக அந்நிய மதத்தவர்கள் பலர் இருந்துள்ளனர். எனினும் எவரும் புத்த சிலையை நீக்கவில்லை.
பெளத்த மதத்தை பின்பற்றாவிடின் பிரச்சினை இல்லை. ஆனால் பெளத்த தர்மத்தை அழிக்கும் நோக்கில் செயற்பட வேண்டாம். தற்போதைய கொழும்பு மேயருக்கு பெளத்த மதத்தின் மீது விருப்பம் இல்லை என்றே எனக்கு தோன்றுகின்றது. எனவே பெளத்த தர்மத்திற்கான எதிராக செயற்படுவோர் விடயத்திலும் பெளத்த கொள்கைகளை பாதுகாக்கும் விடயத்தில் அரசாங்கம் விசேட அவதானம் செலுத்த வேண்டும்.
மேலும் நாடுபூராகவும் தற்போது டியூசன் மாபியா ஒன்று உள்ளது. இதன் விபரீதம் அதிகமாக உள்ளது. அறநெறி பாடசாலை நடவடிக்கைகளுக்கு டியூசன் பெரும் தடையாக உள்ளது. இந்த விடயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.
வஜிரராம அறநெறி பாடசாலையின் நூற்றாண்டு விழா நேற்று கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்படத்தில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும் பிரத மர் ரணில் விக்கிரமசிங்கவும் கலந்து கொண்டிருந்தனர்.
அத்துடன் அமைச்சர்களும் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM