ஐக்கியதேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிராக நாடாளுமன்ற நிலையியற் கட்டளைகளின் கீழ் நடவடிக்கை எடுக்க முடியுமா எனஆராயுமாறு சட்டமா அதிபர் சபாநாயகருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
விஜயகலா மகேஸ்வரன் உரையொன்றின் போது வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலேயே அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.
இது சாத்தியமாகாத பட்சத்தில் நிலையியல் கட்டளைகளில் மாற்றங்களை மேற்கொள்ள முடியுமா என்பது குறித்து ஆராயுமாறு கேட்டுக்கொண்டுள்ள சட்டமா அதிபர் அது சாத்தியமாகாத பட்சத்தில் என்ன நடவடிக்கை என்பதை சபை தீர்மானித்துக்கொள்வதற்கு அனுமதிக்குமாறு ஆலோசனை வழங்கியுள்ளார்.
சபாநாயகர் விஜயகலா மகேஸ்வரனிற்கு எதிராக எவ்வாறான நடவடிக்கைகளை எடுக்கலாம் என ஆலோசனை கோரியதை தொடர்ந்தே சட்டமா அதிபர் தனது ஆலோசனையை வழங்கியுள்ளார்.
விஜயகலா யாழ்ப்பாணத்தில் விடுதலைப்புலிகளின் மீள் எழுச்சி குறித்து ஆற்றிய உரைக்கு சிங்கள அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM