(இராஜதுரை ஹஷான்)
ஜனநாயக ரீதியில் தோன்றிய தேசிய அரசாங்கத்தை ஒரு போதும் போராட்டங்களின் ஊடாக வீழ்த்த முடியாது. கடந்த அரசாங்கத்தினை போன்று தேசிய அரசாங்கம் கொடுங்கோலாட்சி புரியவில்லை என குறிப்பிட்ட துமிந்த திஸாநாயக
எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி தேசிய அரசாங்கத்தை வீழ்த்தும் பகல் கனவுடன் பொது எதிரணியினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர். ஆட்சி மாற்றத்தின் பின்னர் மஹிந்த தரப்பினர் போராட்டங்களை மாத்திரமே முன்னெடுத்துள்ளனர். ஆனால் அதில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்.
2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் சூழ்ச்சிகளை மேற்கொண்டு உருவாக்கப்படவில்லை. மக்களின் அமோக ஆதரவுடனே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது இவ்வெற்றியை தொடர்ந்து இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஜனநாயகம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது. அன்றிலிருந்து இன்றுவரை தேசிய அரசாங்கம் நல்லாட்சி என்ற பெயரில் சிறப்பாகவே செயற்படுகின்றது.
அரசாங்கம் என்ற ரீதியில் செயற்படும் போது சில குறைப்பாடுகள் காணப்படுவது இயல்பு கடந்த அரசாங்கத்தினை போன்று குறைப்பாடுகளே அரசாங்கமாக தேசிய அரசாங்கம் காணப்படவில்லை எமது ஆட்சியில் இடம் பெற்ற மத்திய வங்கியின் பினைமுறி மோசடியை கொண்டு எதிர்தரப்பினர் ஊழல் மிகுந்த அரசாங்கம் என்று குற்றம் சுமத்துகின்றனர்.
மத்திய வங்கியில் இடம் பெற்ற மோசடிகளை அரசாங்கம் மூடி மறைக்கவில்லை சுயாதீனமாக விசாரனைகள் அமைத்து விசாரனைகளை மேற்கொண்டது. குறித்த குற்றத்துடன் தொடர்புடையவர்கள் இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள் வெகுவிரைவில் முக்கிய குற்றவாளி சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்.
கடந்த அரசாங்கத்தில் இது போன்ற சுயாதீனமாக செயற்பட கூடிய எந்த அமைப்புக்களும் காணப்படவில்லை. நீதித்துறையின் சுயாதீனம் கூட மழுங்கடிக்கப்பட்டது. சட்டவாட்சி கோட்பாட்டிற்கு எதிராக முன்னாள் பிரதம நீதியரசர் சிறியானி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்தார்கள், பல ஊழல் மோசடிகள் அரசாங்கத்தின் ஆதரவுடனே இடம் பெற்றது.
இன்று எம்மை விமர்சிக்கும் எதிர் தரப்பில் இருக்கும் சிலர் கடந்த காலங்களில் தேசிய நிதியினை தன் குடும்ப தேவைக்கான பயன்படுத்தியதை மறந்து கருத்துக்களை குறிப்பிடுகின்றனர்.
ஒரு சில குற்றங்களை கொண்டு அரசாங்கத்தை முழுமையாக குற்றஞ்சாட்ட முடியாது. கடந்த அரசாங்கத்தினை விட தேசிய அரசாங்கம் சிறப்பானது என்ற விடயத்தை சர்வதேசமே ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு அரசாங்கம் நல்லாட்சி என்ற நாமத்தினை பெற பாரிய அரசியல் பின்புலம் காணப்பட வேண்டும். 10 வருட காலம் சிறந்த ஆட்சியினை மேற்கொண்டதாக குறிப்பிடும் மஹிந்தவால் இதனை பெற முடியவில்லை. மூன்று வருட ஆட்சியில் நாங்கள் பெற்றுக் கொண்டோம்.
கடந்த பெப்ரவரி மாதம் இடம் பெற்ற உள்ளராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் எம்பக்கம் என்று பொது எதிரணியினர் மார்தட்டிக் கொள்கின்றார்கள் . அரசாங்கத்திற்கு இணையாகவே உள்ளுராட்சிமன்ற பெறுபேறுகள் எதிர்தரப்பினருக்கு கிடைக்கப் பெற்றது . கிடைக்கப் பெற்ற வெற்றியினை கொண்டு எவ்வாறு செயற்பட வேண்டும் என்று தெரியாமலே பொது எதிரணியினர் காணப்படுகின்றனர்.
ஆகவே செப்டம்பர் மாதம் இடம் பெறவுள்ளதாக குறிப்பிடப்படும் எமக்கு எதிராணி போராட்டம் ஒன்றும் பெரும் சவாலல்ல. வெகுவிரைவில் எதிரணியின் பேச்சுக்கள் அனைத்தும் முடக்கப்படும். அரசாங்கத்தில் காணப்படுகின்ற குறைப்பபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு 2020 ஆம் ஆண்டிற்கு பின்னரும் தேசிய அரசாங்கம் ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கான கொள்கைத்திட்டங்கள் மக்கள் மத்தியில் செயற்படுத்தப்படும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM