எதிரணியின் போராட்டம் அரசாங்கத்திற்கு சவாலல்ல ; துமிந்த திஸாநாயக 

Published By: Digital Desk 4

19 Aug, 2018 | 04:35 PM
image

(இராஜதுரை ஹஷான்)

ஜனநாயக ரீதியில்  தோன்றிய தேசிய அரசாங்கத்தை ஒரு போதும் போராட்டங்களின் ஊடாக வீழ்த்த முடியாது. கடந்த அரசாங்கத்தினை போன்று தேசிய அரசாங்கம் கொடுங்கோலாட்சி புரியவில்லை என குறிப்பிட்ட  துமிந்த திஸாநாயக

எதிர்வரும் செப்டம்பர் மாதம் 05 ஆம் திகதி தேசிய அரசாங்கத்தை வீழ்த்தும் பகல் கனவுடன் பொது எதிரணியினர் போராட்டங்களை முன்னெடுத்துள்ளனர்.  ஆட்சி மாற்றத்தின் பின்னர் மஹிந்த தரப்பினர் போராட்டங்களை மாத்திரமே முன்னெடுத்துள்ளனர். ஆனால் அதில் எவ்வித முன்னேற்றங்களும் ஏற்படவில்லை என தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்.

2015 ஆம் ஆண்டு தேசிய அரசாங்கம் சூழ்ச்சிகளை மேற்கொண்டு உருவாக்கப்படவில்லை. மக்களின் அமோக  ஆதரவுடனே ஆட்சி மாற்றம் ஏற்பட்டது  இவ்வெற்றியை தொடர்ந்து இடம் பெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் ஜனநாயகம் மீண்டும் உறுதிப்படுத்தப்பட்டது.  அன்றிலிருந்து இன்றுவரை தேசிய அரசாங்கம் நல்லாட்சி என்ற பெயரில்  சிறப்பாகவே செயற்படுகின்றது.

அரசாங்கம் என்ற ரீதியில் செயற்படும் போது சில குறைப்பாடுகள் காணப்படுவது இயல்பு கடந்த அரசாங்கத்தினை போன்று குறைப்பாடுகளே அரசாங்கமாக தேசிய அரசாங்கம் காணப்படவில்லை   எமது ஆட்சியில் இடம் பெற்ற மத்திய வங்கியின் பினைமுறி மோசடியை கொண்டு எதிர்தரப்பினர்  ஊழல் மிகுந்த அரசாங்கம் என்று குற்றம் சுமத்துகின்றனர்.

மத்திய வங்கியில் இடம் பெற்ற மோசடிகளை அரசாங்கம் மூடி மறைக்கவில்லை சுயாதீனமாக விசாரனைகள் அமைத்து  விசாரனைகளை மேற்கொண்டது. குறித்த குற்றத்துடன் தொடர்புடையவர்கள்  இன்றும் சிறைவாசம் அனுபவித்து வருகின்றார்கள்  வெகுவிரைவில்  முக்கிய குற்றவாளி சட்டத்தின் முன்னிலைப்படுத்தப்படுவார்.

கடந்த அரசாங்கத்தில்  இது போன்ற சுயாதீனமாக செயற்பட கூடிய எந்த அமைப்புக்களும் காணப்படவில்லை. நீதித்துறையின் சுயாதீனம் கூட  மழுங்கடிக்கப்பட்டது. சட்டவாட்சி கோட்பாட்டிற்கு எதிராக முன்னாள் பிரதம நீதியரசர் சிறியானி பண்டாரநாயக்கவை பதவி நீக்கம் செய்தார்கள், பல ஊழல் மோசடிகள் அரசாங்கத்தின்  ஆதரவுடனே இடம் பெற்றது.  

இன்று எம்மை விமர்சிக்கும் எதிர் தரப்பில்  இருக்கும் சிலர்  கடந்த காலங்களில் தேசிய நிதியினை தன் குடும்ப தேவைக்கான  பயன்படுத்தியதை மறந்து கருத்துக்களை குறிப்பிடுகின்றனர்.

ஒரு சில குற்றங்களை கொண்டு அரசாங்கத்தை முழுமையாக குற்றஞ்சாட்ட  முடியாது. கடந்த அரசாங்கத்தினை விட தேசிய அரசாங்கம் சிறப்பானது என்ற விடயத்தை  சர்வதேசமே  ஏற்றுக் கொண்டுள்ளது. ஒரு அரசாங்கம் நல்லாட்சி என்ற நாமத்தினை பெற பாரிய அரசியல் பின்புலம் காணப்பட வேண்டும். 10 வருட காலம் சிறந்த ஆட்சியினை மேற்கொண்டதாக குறிப்பிடும் மஹிந்தவால் இதனை  பெற முடியவில்லை. மூன்று வருட ஆட்சியில் நாங்கள் பெற்றுக் கொண்டோம்.

கடந்த பெப்ரவரி மாதம் இடம் பெற்ற உள்ளராட்சி மன்ற தேர்தலின் பெறுபேறுகளை அடிப்படையாகக் கொண்டு மக்கள் எம்பக்கம் என்று பொது எதிரணியினர் மார்தட்டிக் கொள்கின்றார்கள் .  அரசாங்கத்திற்கு இணையாகவே உள்ளுராட்சிமன்ற பெறுபேறுகள் எதிர்தரப்பினருக்கு கிடைக்கப் பெற்றது .  கிடைக்கப் பெற்ற வெற்றியினை கொண்டு எவ்வாறு செயற்பட வேண்டும் என்று தெரியாமலே பொது எதிரணியினர் காணப்படுகின்றனர்.

ஆகவே செப்டம்பர் மாதம் இடம் பெறவுள்ளதாக குறிப்பிடப்படும் எமக்கு எதிராணி போராட்டம் ஒன்றும் பெரும் சவாலல்ல. வெகுவிரைவில் எதிரணியின் பேச்சுக்கள் அனைத்தும் முடக்கப்படும். அரசாங்கத்தில் காணப்படுகின்ற குறைப்பபாடுகள் நிவர்த்தி செய்யப்பட்டு  2020 ஆம் ஆண்டிற்கு பின்னரும் தேசிய அரசாங்கம்  ஜனநாயக ரீதியில் செயற்படுவதற்கான கொள்கைத்திட்டங்கள் மக்கள் மத்தியில் செயற்படுத்தப்படும் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06
news-image

பாராளுமன்றம் ஏப்ரல் 01ஆம் திகதி மற்றும்...

2024-03-28 16:28:48
news-image

பெருந்தோட்ட கம்பனிகள் சமர்ப்பித்த முன்மொழிவை நிராகரித்த...

2024-03-28 16:19:07
news-image

கெஹெலிய ரம்புக்வெல்லவிற்கு மீண்டும் விளக்கமறியல்

2024-03-28 16:14:07
news-image

கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் தீ பரவல்

2024-03-28 15:52:31
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2024-03-28 16:02:37
news-image

மீண்டும் அதிகரித்த தங்கத்தின் விலை!

2024-03-28 14:48:17
news-image

மக்களின் துயரங்களுக்கு தீர்வு காண நாட்டின்...

2024-03-28 14:26:10
news-image

இருவரைச் சுட்டுக் கொன்ற சம்பத் சமிந்தவின்...

2024-03-28 16:00:53
news-image

மாதமொன்றுக்கு 6 இலட்சம் கோழி முட்டைகள்...

2024-03-28 13:56:01