ரொகிங்யா முஸ்லீம்களிற்கு எதிரான இன சுத்திகரிப்பில் தொடர்புபட்ட நான்கு மியன்மார் படை அதிகாரிகளிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
மியன்மாரின் இராணுவ தளபதிகள் மற்றும் பொலிஸ் அதிகாரிகளிற்கு எதிராகவே அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது என அந்த நாட்டின் திறைசேரி திணைக்களம் அறிவித்துள்ளது.
மியன்மாரில் உள்ள சிறுபான்மை இன சமூகத்தினரிற்கு எதிராக அந்த நாட்டின் படையினர் இனசுத்திகரிப்பு,படுகொலைகள் , பாலியல் வல்லுறவுகள்,சட்டவிரோத படுகொலைகள் மற்றும் ஏனைய பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுள்ளனர் என அமெரிக்க திறைசேரி திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
பாரிய மனித துயரத்திற்கு காரணமானவர்களை பொறுப்புக்கூறச்செய்யும் அமெரிக்க அரசாங்க்த்தின் பரந்துபட்ட தந்திரோபாயத்தை அடிப்படையில் இந்த பயங்கரமான நடத்தைகளில் ஈடுபட்ட படைப்பிரிவுகள் மற்றும் அவற்றின் தலைமை அதிகாரிகளிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக திறைசேரி அறிவித்துள்ளது.
மூன்று படையதிகாரிகள் ,எல்லை காவல்துறையின் தளபதி மற்றும்இரு காலாட் படைப்பிரிவுகளிற்கு எதிராக இந்த தடைகளை விதிப்பதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
ரொகிங்யா இனத்தவர்களிற்கு எதிராக பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்ட மியன்மார் படையினருக்கு எதிராக அமெரிக்கா எடுத்துள்ள மிகக்கடுமையான நடவடிக்கை இதுவென்பது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்க அரசாங்கம் மியன்மாரின் பிரதான தளபதிகள் எவருக்கு எதிராகவும் தடைகளை விதிக்காததுடன் மியன்மாரில் இடம்பெற்றது இனப்படுகொலை மனித குலத்திற்கு எதிரான குற்றம் என குறிப்பிடாததும் முக்கியமானது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM