வவுனியா புகையிரத வீதியில் வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் போலி பற்றுச்சீட்டுக்கள் விநியோகம் இடம்பெறுவதாக வவுனியா நகரசபையில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
வவுனியா புகையிரத வீதி வங்கிகளுக்கு முன்பாக அமைந்துள்ள வாகனத்தரிப்பிடத்தில் வாகனங்கள் நிறுத்துவதற்கு சிறியரக வாகனத்திற்கு ரூபா 30, கனரக வாகனத்திற்கு ரூபா 50 அறவிடப்படுவது வழமை.
கடந்த சில வாரங்களாக அங்கு பணிபுரியும் உத்தியோகத்தர் சிறியரக வாகனத்திற்கு ரூபா 50 அறவிடுவதாகவும் குறித்த பற்றுச்சீட்டில் முத்திரை எதுவும் காணப்படுவதில்லை எனவும் சில சமயங்களில் சிறியரக வாகனத்திற்கு ரூபா 30 (முத்திரை பதித்த) பற்றுச்சீட்டினை விநியோகிப்பதாகவும் பொதுமக்கள் தெரிவித்தனர்.
குறித்த விடயம் தொடர்பாக வவுனியா நகரசபையின் தலைவர் இராசலிங்கம் கௌதமனை வினவிய போது,
குறித்த வாகன தரிப்பிடத்தின் குத்தகை வவுனியா வர்த்தக சங்கத்தினருக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் குறித்த விடயம் தொடர்பாக அவர்களிடம் வினாவுவதாக தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பாக வவுனியா வர்த்தக சங்க தலைவர் எஸ்.சுஜனிடம் வினவிய போது,
சிறிய வாகனத்திற்கு ரூபா 30 , பெரிய வாகனங்களிற்கு ரூபா 50 அறவிடப்படுகின்றது. இவ்விடயம் தொடர்பாக ஏற்கெனவே முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ளது.
குறித்த ஊழியர் மீது விசாரணை நடத்துவதாக தெரிவித்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM