(ஆர்.யசி)
இறுதி யுத்தத்தில் காணாமல்போனோர் பெயர்ப் பட்டியலிலுள்ள பலர் வெளிநாடுகளில் மாற்றுப்பெயர்களில் உள்ளனர். முதலில் சர்வதேச நாடுகளிலுள்ள இலங்கையர்கள் தங்கள் பெயர், விபரங்களை வெளியிட வேண்டும். அதன் பின்னரே இலங்கையில் உண்மையான காணாமல்போனோர் பட்டியலை தயாரிக்க முடியும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாராந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று கலந்து கொண்ட கட்சியின் ஊடக பேச்சாளரும் அமைச்சருமான மஹிந்த சமரசிங்க இதனை குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஊடகவியலாளர் கீத் நொயார் கடத்தப்பட்ட விவகாரம் குறித்து வாக்குமூலம் பெற்றுக்கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. பின்னர் சி.ஐ.டி. யினர் ஒத்துழைப்புடன் அவரது வீட்டிலேயே வாக்குமூலத்தை பெற்றுக்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. முன்னாள் ஜனாதிபதி என்ற வகையில் மஹிந்த ராஜபக் ஷவை மதிக்க வேண்டும். அவருக்கான அங்கீகாரத்தை கொடுக்க வேண்டும். ஆகவே அவரது வீட்டுக்கு சென்று வாக்குமூலம் எடுக்கும் நடவடிக்கை உகந்தது என நாமும் நினைக்கின்றோம்.
அதேபோல் இவ்வாறு கடந்த காலங்களில் ஊடகவியலாளர்கள் கடத்தப்பட்டமை, சித்திரவதை செய்யப்பட்டமை, கொல்லப்பட்டமை என்பன சர்வதேச ரீதியில் இலங்கையை பாரிய அழுத்தங்களுக்கு உள்ளாக்கியது. மனித உரிமைகள், ஊடக அடக்கு முறை என்ற பல்வேறு அழுத்தங்கள் எழவும் இதுவே காரணமாக அமைந்தது. கடந்த அரசாங்கத்தில் இவ்வாறான பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. நாம் ஊடகவியலாளர்களுக்கு எதிரான அடக்கு முறையை வன்மையாக கண்டிக்கின்றோம்.
மேலும் போர் குற்றங்கள் குறித்தும் கவனம் செலுத்த வேண்டும். எனினும் இறுதி யுத்தத்தில் 40 ஆயிரம் பொதுமக்கள் கொல்லப்பட்டனர் என்ற கணிப்பு தவறானது. தருஸ்மான் இலங்கையை சரியாக கணிக்காது தயாரித்த அறிக்கையில் இதனை கூறியுள்ளார். எனினும் எமது இராணுவம் பொதுமக்களை இலக்கு வைத்து ஒருபோதும் யுத்தத்தை முன்னெடுக்கவில்லை. பொதுமக்களை பாதுகாத்து புலிகளை மட்டுமே இலக்கு வைத்து யுத்தத்தை முன்னெடுத்தனர். அதனால்தான் இராணுவத்தினர் அதிகளவில் கொல்லப்படவும் காரணமாக அமைந்தது.
அதேபோல் காணாமல் போனோர் விவகாரமே மிகப்பெரிய அழுத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. அதிகமான பெயர்கள் காணாமல் போனோர் பட்டியலில் உள்ளன. எனினும் யுத்த காலத்தில் சரணடைந்ததாக கூறப்படும் நபர்கள் காணாமல் போனதாக ஒட்டுமொத்தமாக கருதுவதும் தவறானது. ஏனெனில் யுத்த காலத்தில் நாட்டை விட்டு வெளியேறியவர்கள் எத்தனை பேர் என்பதற்கான முழுமையாக அறிக்கை வெளிவிவகார அமைச்சிடம் இல்லை.
மேற்கு நாடுகளுக்கு சென்றவர்கள் யார் என்ற விபரங்கள் அந்தந்த நாடுகளின் மூலம் வழங்கப்படுவதும் இல்லை. இலங்கையில் இருந்து சென்றவர்கள் பலர் தமது பெயர்களை மாற்றிக்கொண்டு அந்தந்த நாடுகளில் பதிவாகியுள்ளனர். எனினும் உண்மையான பெயர்கள் இங்கு காணாமல்போனோர் பட்டியலில் உள்ளது. முதலில் சர்வதேச நாடுகளில் உள்ள இலங்கையர்கள் பெயர் விபரங்களை வெளியிட வேண்டும். அதன் பின்னரே இலங்கையில் உண்மையான காணாமல் போனோர் பட்டியலை தயாரிக்க முடியும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM