மட்டுவில் 57 இலட்சம் ரூபா பணம் கொள்ளை : சமூர்த்தி திணைக்கள உத்தியோகத்தர் உட்பட 9 பேர் கைது!!!

Published By: Digital Desk 7

16 Aug, 2018 | 11:27 AM
image

மட்டக்களப்பு மாவட்ட பிரதான சமூர்த்தி திணைக்களத்திற்குரித்தான 57 இலட்சம் ரூபா நிதிக் கையாடல் செய்யப்பட்டமை தொடர்பாக 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் பெருங்குற்ற தடுப்புப் பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு சமூர்த்தி திணைக்களத்தில் உள்ள அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர்  கணக்காளரின் கையொப்பத்தை காசோலையில் இட்டு பணத்தை களவாடியுள்ளமை விசாரணையில் தெரியவந்ததையடுத்தே நேற்று குறித்த 9 பேரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

மட்டக்களப்பு மாவட்ட செயலத்தில் உள்ள சமூர்த்தி திணைக்களத்தின்  கணக்குப்பகுதிக்குப் பொறுப்பாகக் கடமையாற்றும் உத்தியோகஸ்தர் ஒருவர் கடந்த 14ஆம் திகதி சமூர்த்தி திணைக்களத்திற்குரித்தான 57 இலட்சம் ரூபாவை சமூர்த்தி திணைக்களத்தின் கணக்காளரின் சரியான கையொப்பத்தை காசோலையில் இட்டு அதனை வங்கியில் கொடுத்து பணத்தை பெற்றுச் சென்றுள்ளார்.

கொழும்பில் உள்ள சமூர்த்தி திணைக்களத்தில் இருந்து செவ்வாய்க்கிழமை குறித்த அலுவலத்தின் (திணைக்களத்தின் சராசரி நிலுவையை) மீதியை பரிசோதித்து கொழும்புக்கு அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இதன்போது சமூர்த்தி திணைக்களத்தின் கணக்குக்கான வங்கிப்பணம் பரிசோதிக்கப்பட்டது.

சமூர்த்தி திணைக்களத்தின் வங்கிக்கணக்கை பரிசோதித்ததில்  57 இலட்சம் ரூபா பணம் காணாமற் போயுள்ளமை தெரிய வந்தது.

இதுவிடயமாக மட்டக்களப்பு தலைமைப் பொலிஸில் செவ்வாய்க்கிழமை (14.08.2018) கணக்காளரினால் முறைப்பாடு செய்யப்பட்டது.

மட்டக்களப்பு பொலிஸ் பெரும் குற்றத் தடுப்பு பொலிஸ் பொறுப்பதிகாரி மேற்கொண்ட விரிவான விசாரணையின் பின்னர் சமூர்த்தி திணைக்களத்தில் கடமையாற்றிய அபிவிருத்தி உத்தியோகஸ்தர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

தொடர்ந்து மேற்கொண்ட விசாரணையில் இவருடன் கூடவே, மேலும் 8 பேரை பண மோசடியில் பொலிஸார் கைது செய்துள்ளார்கள்.

கைது செய்யப்பட்ட பிரதான சந்தேகநபரை விசாரணைகளுக்கு உட்படுத்திய பொலிஸ் குழு அவரது சொந்த ஊரான வவுணதீவு பொலிஸ் பிரிவில் உள்ள கரவெட்டி கிராமத்திற்குச்; சென்று பரிசோதனைகளை மேற்கொண்டது.

இதன்போது சந்தேக நபரின் வீட்டில் உள்ள தென்னை மரத்தில் இருந்து 27 இலட்சம் ரூபா பணம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சந்தேக நபர் இப்பணத்தை தனது உறவினர்கள் நான்கு பேரின் கணக்கிலக்கத்திற்கு பரிமாற்றம் செய்து அதனை மீளப்பெற்று தன்னுடைய வீட்டில் உள்ள தென்னை மரத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் மறைத்து வைத்துள்ளார்.

இச் சம்பவம் தொடர்பாக மட்டக்களப்பு தலைமையகப் பொலிஸார் கைது செய்த 9 பேரை தடுத்து வைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றார்கள்.

மேலும் குறித்த பிரதான சந்தேக நபருக்கு  எதிராக பொலிஸாரும், சமூர்த்தி திணைக்களமும் இணைந்து  சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அறிய முடிகின்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22