இந்திய சுதந்திர தின நிகழ்வு யாழில் இடம்பெற்றது

Published By: Digital Desk 4

15 Aug, 2018 | 08:25 PM
image

இந்தியாவின் 72 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் யாழ். கச்சேரி  வீதியிலுள்ள இந்திய இல்லத்தில் யாழ். இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஏற்பாட்டில் உயர்ஸ்தானிகர் சங்கர் பாலச்சந்திரன் தலைமையில்  இன்று புதன்கிழமை   காலை  சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.

 யாழ். இந்திய உயர்ஸ்தானிகர் இந்திய தேசியக் கொடியினை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

அதனை தொடர்ந்து இந்திய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் சுதந்திரதின உரையினை உயர்ஸ்தானிகர் வாசித்ததுடன், வடக்கில் இந்திய அரசாங்கம் மேற்கொண்டுள்ள அபிவிருத்தி திட்டங்கள்  , மக்களுடனான  தொடர்பாடல் மற்றும் இந்திய புலமைப் பரிசில்கள் பற்றியும்   உரையாற்றினார்.

உரையினைத்  தொடர்ந்து  யாழ் பல்கலைக்கழக நடனத்துறையினரின்  "பாரத சுதந்திரம்" நாட்டிய நாடகம்  இடம்பெற்றமை  குறிப்பிடத்தக்கது. 

குறித்த நிகழ்வில் யாழ். மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கம் வேதநாயகன், வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன், வடமாகாண பிரதம செயலாளர் ஏ.பத்திநாதன், யாழ். பல்கலைக்கழக துணை வேந்தர் பேராசிரியர் ஆர்.விக்னேஸ்வரன் மற்றும் பேராசிரியர்கள், கலைஞர்கள், உட்பட  பலர் கலந்துக் கொண்டனர்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56
news-image

பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தாத பதிவு செய்யப்பட்ட அரசியல்...

2024-03-28 21:26:04
news-image

ஜனாதிபதி நிதியத்துக்கும் அரசாங்கத்துக்கும் வழங்கப்படும் பங்களிப்பை...

2024-03-28 21:24:34
news-image

உண்மை, ஒற்றுமை, நல்லிணக்க ஆணைக்குழு சட்டமூலத்தை...

2024-03-28 21:40:00
news-image

அதிஉயர் பாதுகாப்பு வலயங்களில் காணப்படும் ஏழு...

2024-03-28 21:34:28
news-image

கம்பஹாவில் 5 நகர திட்டங்கள் மே...

2024-03-28 21:23:24
news-image

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் மைத்திரிக்கு...

2024-03-28 19:46:59
news-image

தடுப்பூசி போடப்பட்ட மாணவ குழுவில் 10...

2024-03-28 18:55:29
news-image

இலங்கைக்கான அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகர் மன்னார் விஜயம்...

2024-03-28 21:33:20
news-image

நன்னடத்தை பாடசாலை மேற்பார்வையாளர் பெண்ணிற்கு மீண்டும்...

2024-03-28 16:58:06