(இராஷா வேலு)
வெள்ளவத்தை பகுதியில் பெண்ணொருவர் தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.
யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாகவும் தற்போது கொழும்பில் வசித்து வரும் இரண்டு பிள்ளைகளின் தாயான 46 வயதுடைய பிரியதர்சினி புஷ்பராஜா என்பவரே இவ்வாறு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இம்மரணம் குறித்து பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலையடுத்து குறித்த பெண்ணின் சடலம் வெள்ளவத்தை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பீட்டர்சன் வீதியிலுள்ள அவரது வீட்டின் அறையிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.
இவரது கணவர் ஒரு வைத்தியர் என்பதோடு இவர் இரண்டு பெண் பிள்ளைகளின் தாயுமாவார். இவர் தனது பிள்ளைகளுடன் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின் பின்னர் தனது அறைக்குச் சென்று மின் விசிறியில் தனது சாரியில் தூக்கிட்டு கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவருகிறது.
மீட்கப்பட்ட சடலமானது பிரேத பரிசோதனைகளுக்காக களுபோவில வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வெள்ளவத்தை குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸ் பொறுப்பதிகாரியின் தலைமையிலான குழுவொன்றால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM