(இரோஷா வேலு)
மஹரகம - பிளியந்தல வீதியில் பங்தார பகுதியில் வைத்து மோட்டார் வாகனத்தில் பயணம் செய்தவர்களை தடுத்து விசேட அதிரடிபடையின் புலனாய்வுப் பிரிவு பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது கேரளா கஞ்சாவுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த இருவரும் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டு வரும் பெரும் புள்ளிகள் என ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
வெள்ளவத்தை மற்றும் ஹங்கல்ல பகுதிகளைச் சேர்ந்த 26 மற்றும் 36 வயதுகளையுடைய இரண்டு ஆண்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களை கைது செய்த வேளையில் அவர்களிடமிருந்து 10 கிலோ 700 கிராம் கஞ்சாவும் சந்தேக நபர்கள் பயணித்த காரொன்றும் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளது.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களை மேலதிக விசாரணைகளுக்காக போதைத்தடுப்பு பிரிவு பொலிஸாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM