(எம்.சி.நஜிமுதீன்)
நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் முறையற்ற நடவடிக்கையினால் தொடர்ந்தும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. ஆகவே இவ்வருடம் நிறைவடைவதற்கு முன் அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும் என கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஏற்பாடுசெய்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு நேற்று பத்தரமுல்லையிலுள்ள அக்கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதைத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
மக்கள் வாழ்க்கையைக் கொண்டு நடத்த முடியாத நிலைக்கு நல்லாட்சி அரசாங்கம் தள்ளியுள்ளது. நாட்டில் தற்போது சகல துறைகளிலும் பணிப் பகிஷ்கரிப்பு இடம்பெறுகிறது. படைப்பிரிவு மற்றும் பொலிஸாரைத் தவிர ஏனைய சகல தரப்பினரும் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கத்துக்கு மக்கள் கடந்த பெப்ரவரி மாதம் 10 ஆம் திகதி நல்ல தீர்ப்பை வழங்கியிருந்தனர். அத்தேர்தல் மூலம் அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லாது போயுள்ளது. மேலும், பிரதமர் பதவி கோரிய கூட்டு எதிர்க்கட்சியினர் தற்போது ஏன் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கோர வேண்டும் என அமைச்சர் மஹிந்த அமரவீர கேள்வி எழுப்பியுள்ளார்.
எனினும், அவரைப் போன்று, கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிப்பவர்களுக்கு பதவி மோகம் இல்லை. பதவி மோகம் இருக்குமாயின் நாம் அரசாங்கத்தில் இணைந்து அமைச்சுப் பதவிகளைப் பெற்றிருப்போம். ஆகவே எதிர்க்கட்சித் தலைமைப் பதவி கோருவது பதவிக்காக அல்ல. நாட்டுக்கு எதிரான தீர்மானங்களை மேற்கொள்ளும் அரசாங்கத்துக்கு பாராளுமன்றில் உரிய வகையில் எதிர்ப்பைத் தெரிவிப்பதற்காகும்.
மேலும் நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுக்கும் முறையற்ற நடவடிக்கையால் தொடர்ந்தும் நாட்டை முன்னெடுத்துச் செல்ல முடியாது. ஆகவே இவ்வருடம் நிறைவடைவதற்கு முன் அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல வேண்டி வரும். அத்துடன் கூட்டு எதிர்க்கட்சி பாராளுமன்றில் சுயாதீனமாகச் செயற்படுவது குறித்து, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ தலைமை யில் நாளை(இன்று) நடைபெறும் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்படவுள்ளது.
மேலும் பாராளுமன்றின் முழு அளவிலான பொறுப்புக்கூறல் சபாநாயகருக்கு உள்ளது. எனவே எழுபது உறுப்பினர்களைக்கொண்ட கூட்டு எதிர்க் கட்சிக்கு எதிர்க் கட்சித் தலைமை வழங்கப்பட வேண்டும் என சபாநாயகரின் உள் மனம் சொல்கிறது. இருந்தபோதிலும் அதற்கு அடுத்த சக்தி இடமளிப்பதில்லை. ஆகவே ஆட்சி மாற்றம் ஏற்படும் வரையில் கூட்டு எதிர்க் கட்சிக்கு எதிர்க் கட்சித் தலைமையை வழங்காதிருப்பதற்கே எதிர்பார்க்கின்றனர். ஏனெனில் அரசாங்கமும் உத்தியோகபூர்வ எதிர்க் கட்சியும் இணைந்தே ஆட்சியை முன்னெடுக்கின்றன.
கூட்டு எதிர்க் கட்சியிலுள்ளவர்கள் சுயாதீனமாக செயற்படுவதற்கு தீர்மானிக்கின்ற வேளையில் எமது பாராளுமன்ற உறுப்புரிமைக்கு சவால் ஏற்படுமாயின் அதனை எதிர்கொள்ளத் தயாராக உள்ளோம். அது குறித்து நீதிமன்றம் செல்வதற்கும் ஆயத்தமாக உள்ளோம். ஏனெனில் நாம் தேசியப்பட்டியல் மூலம் பாராளுமன்றுக்குத் தெரிவாகவில்லை. மக்களின் ஆணை மூலமே தெரிவாகியுள்ளோம். எனவே அதனை முன்னிறுத்தி நீதிமன்ற நடவடிக்கைகளை எதிர்கொள்வோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM