முல்லைத்தீவில் பதற்றம்! தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் தீக்கிரை

Published By: Priyatharshan

14 Aug, 2018 | 03:35 AM
image

முல்லைத்தீவு நாயாறுப் பகுதியில் தமிழர்களின் மீன் வாடிகள், படகுகள், இயந்திரங்கள் அனைத்தும் தீயிட்டுக் கொளுத்தப்பட்டமையினால் அப் பகுதியில் பதற்றம் நிலவுகின்றது.

இனம் தெரியாதோர் வேண்டுமென்றே வைத்த தீயினால் 8 வாடிகள்,  3 படகுகள் , 2 இயந்திரம் 27 வலைகள் என்பன முற்றாக தீயில் எரிந்து அழிவடைந்துள்ளன.

முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆபத்தான சுருக்குவலையினை மின் ஒளி பாய்ச்சி மீன்பிடிக்கு பயன்படுத்துவதனை தடை செய்ய வேண்டும் எனக் கோரி உள்ளூர் மீனவர்கள் கடந்த 10 நாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இதனையடுத்து 12 ஆம் திகதி மாலையில் கடற்றொழில் அமைச்சர் நேரில் வருகை தந்து அது தொடர்பில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி வழங்கி அதுவரை குறித்த முறையினை தடை செய்ய உத்தரவிட்டார்.

இந்த நிலையில் திங்கட் கிழமை மாலை 6 மணியளவில் தென்னிலங்கை மீனவர்கள் இதே தடை செய்யப்பட்ட தொழில் உபகரணங்களை கடலிற்கு கொண்டு செல்ல முயன்ற சமயம் தமிழ் மீனவர்கள் தடுத்து நிறுத்தியிருந்தனர்.

இந்த நிலையிலேயே இரவு 11 மணியளவில் தமிழ் மீனவர்களின் வாடிகள், படகுகள், இயந்திரங்கள், வலைகள் என அனைத்தும் தீ வைத்து கொளுத்தப்பட்டுள்ளது. 

இதனால் பல மில்லியன் இழப்பு ஏற்பட்டதோடு குறித்த பிரதேசத்தில் பதற்றம் நிலவுகின்றது.

 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08