ஐம்பது வயதைக் கடந்த சிலருக்கு இரவில் உறங்கி காலையில் படுக்கையிலிருந்து எழும் போது வாயை திறந்து பேச முடியாமலும், உதவிக்கு அழைக்கும் போது பேச்சு முழுமையாக இல்லாமல் குழறியபடியும் இருக்கும்.
உடனே குடும்ப உறுப்பினர்கள் அவருக்கு பக்கவாத பாதிப்பு ஏற்பட்டுவிட்டதோ என்று அஞ்சி பதற்றமடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைக்கு அழைத்து செல்வார்கள்.
அங்கு, அவர்களுக்கு உடனடியாக இரத்த பரிசோதனை, இரத்த சர்க்கரை பரிசோதனை, இ எம் ஜி எனப்படும் பரிசோதனை, அவசியப்பட்டால் அல்லது பாதிப்பினை உறுதிச் செய்து கொள்வதற்காக மூளை பகுதிக்கான எம் ஆர் ஐ ஸ்கேன் பரிசோதனை போன்ற பரிசோதனைகளை மேற்கொள்வார்கள்.
இதன் மூலம் Facial Palsy என்ற பாதிப்பிற்கான காரணத்தை துல்லியமாக வைத்தியர்கள் கண்டறிவார்கள்.
இது உயர் இரத்த அழுத்தத்தின் காரணமாக மூளையில் ஏற்பட்ட பாதிப்பின் விளைவா? அல்லது வைரஸ் கிருமிகளால் முகத்தில் உள்ள நரம்புகளின் செயல்பாடு பாதிக்கப்பட்டதால் ஏற்பட்ட விளைவா? என்பதை தெரிந்து கொண்டு அதற்குரிய சிகிச்சையை வழங்குவார்கள். பெரும்பாலானவர்களுக்கு Facial Palsy என்ற பாதிப்பிற்கும், பக்கவாதத்தால் ஏற்படும் Facial Palsy என்ற பாதிப்பிற்கும் வித்தியாசம் இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வதில்லை.
அதனால் இத்தகைய பரிசோதனைகளின் மூலம் அந்த பாதிப்பை மருத்துவர்கள் உறுதி செய்து கொள்வார்கள்.
சளி தொந்தரவு அதிலும் மார்புச் சளி தொந்தரவு அதிகமுள்ளவர்கள் இத்தகைய Facial Palsy பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். இத்தகைய பாதிப்பிற்கு ஆளாகுபவர்களுக்கு இயன்முறை மருத்துவ சிகிச்சை, மருந்து, மாத்திரை, ஊசி ஆகியவற்றின் மூலம் சிகிச்சையளித்து குணப்படுத்த இயலும்.
இத்தகைய பாதிப்பு குணமடைவதற்கு சிலருக்கு ஆறு மாத கால அவகாசம் கூட ஆகலாம். அதே போல் நோயாளிக்கு இது பக்கவாதம் அல்ல என்பதை எடுத்துரைப்பார்கள். அதே தருணத்தில் அவருடைய உடலில் இருக்கும் துணை கோளாறுகளான உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோயினை முழுவதுமாக கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு இதற்கு சிகிச்சை பெற்றால் இந்த பாதிப்பு குணமடையும் வாய்ப்பு அதிகம்.
டொக்டர் சைமன்
தொகுப்பு அனுஷா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM