மட்டக்களப்பு – கல்முனை வீதி தாளங்குடா சந்தியில் இன்று காலை இடம்பெற்ற கோர விபத்தில் படுகாயமடைந்த கூலித் தொழிலாளி மரணித்து விட்டதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவத்தில் புதுக்குடியிருப்புப் பிரதேசத்தைச் சேர்ந்த 57 வயதுடைய எஸ். ஆறுமுகம் என்பவரே மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற சமயம் மரணித்துள்ளார்.
மட்டக்களப்பிலிருந்து கல்முனை நோக்கிச் சென்ற கார் வேகக் கட்டுப்பாட்டை இழந்து தாளங்குடாவிலிருந்து காத்தான்குடி நோக்கி சைக்கிளில் வந்து கொண்டிருந்த கூலித் தொழிலாளி மீது மோதியதுடன் வீதி மருங்கிலிருந்த மரம் மற்றும் கொங்கிறீட் கற்குவியல் என்பவற்றில் மோதி நின்றது.
இச்சம்பவத்தில் காரை செலுத்திச் சென்ற வங்கி முகாமையாளரும் காயமடைந்தார்.
கூலித் தொழிலாளியும் வங்கி முகாமையாளரும் காயங்களுக்குள்ளாகிய நிலையில் ஆரையம்பதி மாவட்ட வைத்தியசாலையில் முன்னதாக அனுமதிக்கப்பட்டு பின்னர் படுகாயங்களுக்குள்ளான கூலித் தொழிலாளி மேலதிக சிகிச்சைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட நிலையில் அவர் உயிரிழந்துள்ளார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM