சிவில் சமூகத்தினரின் கடும் எதிர்ப்பையும் மீறி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ரஸ்யாவிற்கான இலங்கை தூதுவராக தயான் ஜயதிலகவை நியமித்துள்ளார்.
இலங்கை ஜனாதிபதி ஒன்பது நாடுகளிற்கான தூதுவர்களின் விபரங்களை அறிவித்துள்ளார்.இதில் தயான்ஜயதிலகவின் பெயரும் இடம்பெற்றுள்ளது. அவர் ரஸ்யாவிற்கான தூதுவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் சிவில் சமூகத்தினர் தயானின் நியமனத்திற்கு கடும் எதிர்ப்பு வெளியிட்டு வந்த நிலையில் ஜனாதிபதி அவர்களின் கரிசனையை புறக்கணித்து இந்த நியமனத்தை மேற்கொண்டுள்ளார்.
இலங்கை நாடாளுமன்றத்தின் உயர் பதவிகளிற்கான குழுவிற்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருந்த இலங்கையின் சிவில் சமூக பிரதிநிதிகள் தயான் ஜயதிலக நியமிக்கப்படலாம் என வெளியாகியுள்ள தகவல்கள் காரணமாக நாங்கள் ஆழ்ந்த கவலை அடைந்துள்ளோம் என தெரிவித்திருந்தனர்.
தயான் ஜயதிலகவின் கொள்கையும் 2015 ஜனவரி 8 இயக்கத்தை வழிநடத்திய கொள்கையும் முற்றுமுழுதாக வெவ்வேறானவை எனவும் சிவில் சமூகத்தினர் தமது கடிதங்களில் தெரிவித்திருந்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM