காதலர்களுடன் இணைந்து காட்டுக்குள் பியர் அருந்திக்கொண்டிருந்த இரு யுவதிகள் உட்பட நான்கு பேரை கம்பளை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கம்பளை ரத்மல்கடுவ பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுகளுடைய இரு யுவதிகளும் 22 வயது மதிக்கத்தக்க இளைஞர்கள் இருவருமே இதன் போது கைது செய்யப்பட்டனர்.
கம்பளை நகரிலிருந்து மகாவலி அணைக்கட்டுப் பிரதேசத்திற்குச் செல்லும் வழியில் அமைந்துள்ள காட்டுப் பகுதிக்குள் இரண்டு காதல் ஜோடிகள் மது அருந்துவதாக கம்பளை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் அங்கு குறித்த இரண்டு காதல் ஜோடிகளும் பியர் அருந்திக் கொண்டிருந்ததைக் கண்டு பிடித்துள்ளனர்.
இதன் போது மேற்படி சுற்றிவளைப்பை மேற்கொண்ட கம்பளை பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த உப பொலிஸ் பரிசோதகர் எஸ். அக்பர் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இருவரையும் கைது செய்ததுடன் அவர்கள் பயணித்த காரையும் கைப்பற்றி பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.
அங்கு விசாரணைகளை மேற்கொண்ட கம்பளை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ஆர்.ஜயந்த குறித்த நால்வரையும் கடுமையாக எச்சரித்து விடுதலை செய்தார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM