பருத்தித்துறை துறைமுகத்தில் ஆய்வு நடவடிக்கை!!!

Published By: Digital Desk 7

10 Aug, 2018 | 10:34 AM
image

யாழ்ப்பாணம் - பருத்தித்துறை துறைமுகத்தில் காணப்படும் புராதன தொல்லியல் ஆதாரங்களை மீட்கும் ஆய்வு நடவடிக்கைகளை தொல்லியல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

யாழ்.பருத்தித்துறையில் உள்ள துறைமுகமானது ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதி உதவியுடன் மீன் பிடித்துறை அமைச்சினால் அபிவிருத்தி செய்யப்பட்டு வருகின்றது.

இந் நிலையில் இத் துறைமுகமானது ஒல்லாந்தர், போத்துகேயர் காலத்திலேயே பயன்படுத்தப்பட்டு வந்த நிலையில் அதற்கு முன்னரும் அத் துறைமுகம் பயன்படுத்தப்பட்டு வந்ததாக வரலாற்று ரீதியாக கூறப்படுகின்றது. அத்துடன் அங்கு ஒல்லாந்தர் காலத்து கோட்டை ஒன்று காணப்பட்ட நிலையில் அதன் இடிபாடுகளும் காணப்படுகின்றது.

இவ்வாறான நிலையில் அக் கோட்டை இடிபாடுகளை அடையாளப்படுத்தியும், அத் துறைமுகத்தின் கீழ் உள்ள தொல்லியல் ஆதாரங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் தொல்லியல் திணைக்களமானது அகழ்வாராச்சிகளை ஆரம்பித்துள்ளது. இதற்காக தற்போது கடல் அடித்தள ஆய்வு பணிகளை தொல்லியல் திணைக்களம் ஆரம்பித்துள்ளது.

நேற்றைய தினம் வரை எந்தவிதமான பொருட்களும் கண்டெடுக்கப்படாததுடன் கடல் கொந்தளிப்பு காரணமாகவும் இவ் அகழ்வு பணிகள் தாமதமடைந்துள்ளதாகவும் தொல்லியல் திணைக்கள அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

17 ஆமைகளை கடத்திய இருவர் காத்தான்குடி...

2024-04-19 15:33:40
news-image

முதலாளிமார் சம்மேளனத்துக்கு எதிராக இலங்கைத் தொழிலாளர்...

2024-04-19 15:24:08
news-image

தங்கத்தின் விலை அதிகரிப்பு!

2024-04-19 14:28:17
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2024-04-19 14:22:06
news-image

அம்பாறையிலிருந்து அரிசி ஏற்றிச் சென்ற லொறி...

2024-04-19 14:17:56
news-image

லுணுகலை ஹொப்டன் பகுதியில் நீரில் மூழ்கி...

2024-04-19 14:03:38
news-image

மரண தண்டனை விதிக்கப்பட்ட நிலையில் 35...

2024-04-19 14:11:24
news-image

கல்வி நிர்வாக சேவைக்கான பரீட்சை முடிவுகள்...

2024-04-19 13:53:47
news-image

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு...

2024-04-19 14:36:47
news-image

நாட்டில் வைத்தியர்களுக்குப் பற்றாக்குறை!

2024-04-19 13:04:56
news-image

வரலாறு : கச்சதீவு யாருக்கு சொந்தம்...

2024-04-19 13:12:49
news-image

கொழும்பில் சட்டவிரோதமாக நிர்மாணிக்கப்பட்ட கட்டிடங்கள் தொடர்பில்...

2024-04-19 12:39:54