வவுனியா சாந்தசோலைக் கிராமத்திலுள்ள பெண் தலைமைக் குடும்பங்களின் நன்மை கருதி நுண்நிதி நிறுவனத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட கடனை மீளப் பெற்றுக்கொள்ளவும் புதிதாக நுண்நிதி கடன்களை வழங்குவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது.
மாதர் சங்கம், இளைஞர் கழகம், சனசமூக நிலையம் எடுத்துக்கொண்ட தீர்மானம் எனத் தெரிவித்து சாந்தசோலைப்பகுதியில் பதாதைகளைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
கடந்த திங்கட்கிழமை சாந்தசோலையில் வீடு ஒன்றில் வைத்து நுண்நிதி நிறுவனங்களின் செயற்பாடுகளை அப்பகுதி மக்கள் தடை செய்துள்ளதுடன் பணியாளர்களையும் அங்கிருந்து திருப்பி அனுப்பியுள்ளனர். இதையடுத்து அங்கு நுண்நிதி நிறுவனத்தின் செயற்பாடுகள் அனைத்தையும் நிறுத்தக் கோரி சங்கத்தினால் குறித்த நிறுவனங்களுக்கு எழுத்து மூலமாக அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் இன்று பிற்பகல் சாந்தசோலையின் சில பகுதிகளில் பெண்களின் தற்கொலையைத் தவிர்ப்பதற்கான திட்டம் இன்றிலிருந்து சாந்தசோலைக் கிராமத்திற்குள் வழங்கப்பட்ட நுண்நிதிக்கடனை மீளப்பெற்றுக் கொள்ளவும் மேலும் புதிதாக நுண்நிதிக்கடன் வழங்குவதற்கும் அனுமதிக்கப்படமாட்டாது என்பதனை அறியத்தருகின்றோம் என எழுதப்பட்ட பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM