கருக்கலைப்பை சட்டபூர்வமானதாக்குவதற்கான சட்டமூலத்தை ஆர்ஜென்டீனா நிராகரித்துள்ளது.
ஆர்ஜென்டீனாவின் செனட் 38-31 என்ற அடிப்படையில் இந்த சட்டமூலத்தை நிராகரித்துள்ளது.
கர்ப்பம் தெரிவித்தவர்கள் முதல் 14 வார காலத்திற்குள் கருக்கலைப்பு செய்வதற்கு வழிவகுக்கும் சட்டமூலத்தையே ஆர்ஜென்டீனாவின் செனெட் நிராகரித்துள்ளது.
தற்போதைய சட்டத்தின் படி பாலியல்வன்முறை மற்றும் தாயின் உடலிற்கு ஆபத்து ஏற்படும் தருணங்களிலேயே கருக்கலைப்பில் ஈடுபடமுடியும்.
இதேவேளை இந்த சட்டமூலம் தோற்கடிக்கப்பட்டதை பெண்கள் உடல்நலம் மற்றும் அவர்களின் உரிமைக்கு ஏற்பட்ட பின்னடைவு என பெண் உரிமை ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.
செனெட் வாக்களித்த விதமும் இந்த சட்டமூலம் குறித்து விவாதம் இடம்பெற்ற விதமும் கவலையளிக்கின்றது எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சட்டத்தினை நிறைவேற்றுவதற்கான அழுத்தங்களை தொடர்ந்தும் கொடுக்கப்போவதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
குறிப்பிட்ட சட்டமூலம் தொடர்பில் ஆர்ஜென்டீனாவில் பலத்த ஆர்வம் காணப்பட்டதுடன் கடும் விவாதங்களும் இடம்பெற்றிருந்தன.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM