வட்டவளை பெருந்தோட்ட கம்பனி நிர்வாகத்தின் கீழ் இயங்கும் லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெசிபன் தோட்டத் தொழிலாளர்கள் 160க்கும் மேற்பட்டவர்கள் இன்று காலை 11 மணிக்கு தோட்ட கொழுந்து மடுவத்திற்கு முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.
தோட்ட உதவி அதிகாரி தொழிலாளர்களை தகாதவார்த்தைகளால் பேசுவதாகவும், தொழிலாளர்களின் கோரிக்கையை தோட்ட அதிகாரிகள் மற்றும் உத்தியோகஸ்தர்கள் மறுப்பதால் தொழிலாளர்களின் தொழில் நடவடிக்கையை முன்னெடுக்க முடியாத நிலையில் உள்ளதாக தெரிவிக்கின்றனர்.
குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,
தற்போது தேயிலை மலைகளில் கொழுந்து மிகவும் குறைவாக உள்ளதால் ஒரு நாள் சம்பளத்திற்கு 18 கிலோ கிராம் கொழுந்து பறிக்க முடியாத நிலையில் தோட்ட நிர்வாகம் தற்போது கட்டாயம் 18 கிலோ பறித்தால் மாத்திரமே சம்பளம் வழங்க முடியும் என தெரிவித்துள்ளது.
இதனை கண்டித்தும் தோட்டத்தில் உள்ள தேயிலை மலைகள் காடாகி உள்ளதால் இதனை துப்புரவு செய்து தருமாறும் உதவி அதிகாரியை இடமாற்றம் செய்ய வேண்டுமெனவும் ஆர்பாட்டத்தின் போது தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM