நீரிழிவு நோயாளிகள் பற்றிய அண்மைய ஆய்வு ஒன்றில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது அதனை கட்டுப்பாட்டில் வைத்திருப்பவர்கள் ஏதோ சில காரணங்களால் இரண்டு வார காலத்திற்கு தங்களின் நாளாந்த நடைபயிற்சியையோ அல்லது நாளாந்த உடற்பயிற்சியையோ விட்டுவிட்டால் மீண்டும் அவர்களுக்கு நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரித்துவிடுகிறது என்று கண்டறிந்திருக்கிறார்கள்.
டைப்=2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்கள் அல்லது டைப் =2 நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுவிடக்கூடாது என்று எச்சரிக்கையாகள இருப்பவர்கள் என அனைவரும் ஒருபோதும் நடைபயிற்சியையோ அல்லது உடற்பயிற்சியையோ விட்டுவிடாதீர்கள்.
அப்படிவிட்டுவிட்டால் உங்களுடைய உடல் திறன் குறைந்து, இன்சுலீன் சுரப்பில் மீண்டும் சமச்சீரற்ற தன்மை உண்டாகிவிடும். இதன் காரணமாக இன்சுலீன் சுரப்பில் பற்றாக்குறை ஏற்பட்டு நீரிழிவு நோயின் பாதிப்பு உண்டாகும்.
இன்றைய இளைய சமுதாயத்தினர் நீரிழிவு நோயைப் பற்றி போதிய விழிப்புணர்வைப் பெற்றிருந்தாலும் அதற்குரிய முக்கியத்துவத்தை அளிக்க மறுக்கிறார்கள். இதனால் இவர்கள் நாற்பது வயதிலேயே நீரிழிவு நோயின் பாதிப்பிற்கு ஆளாகி, ஆயுள் முழுவதும் அதனை கட்டுப்படுத்துவதிலேயே செலவிடுகிறார்கள்.
தினமும் காலையில் ஆறு மணிக்குள்ளாக முப்பது நிமிட நடைபயிற்சி சிறந்தது. குறைந்தபட்சம் ஏழு மணிக்குள்ளாகவது அரை மணி நேர நடைபயிற்சியை மேற்கொள்ளுங்கள். மது அருந்தினால் இரத்த அழுத்தமும், உடல் எடையும் அதிகரிக்கும்.
இதன் காரணமாகவே இன்சுலீன் சுரப்பு மற்றும் செயற்பாட்டில் மாற்றம் ஏற்படும். அதனால் மது அருந்துவதை முற்றாக தவிர்க்கவேண்டும். ஆரோக்கியமான உணவு முறையை உங்கள் வைத்தியர்களிடம் ஆலோசனைப் பெற்று அதனை உறுதியாக பின்பற்றுங்கள்.
ஏனெனில் உலகளவில் ஆசிய நாடுகளில் தான் நீரிழிவு நோயால் பாதிக்கப்படுபவர்கள் எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறதாம்.
அதனால் ஆரோக்கியமான உணவுமுறையை தெரிவு செய்யுங்கள். அதில் தொடர்ச்சியாகவும், உறுதியாகவும் பயணப்படுங்கள். நீரிழிவு நோயிலிருந்து தற்காத்து கொள்ளுங்கள்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM